தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு- கரையோர மக்கள் முகாம்களில் தஞ்சம்
நெல்லை: நெல்லையில் பாபநாசம், சேர்வலாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனாலா் கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு முக்கிய பொருட்களை அப்புறப்படுத்தி வெளியேறினர்.
நெல்லை,தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தொடர்ந்து முன்று மாதமாக பெய்து வருகிறது. இதனால் அணைகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பாபநாசம், அணையின் நிரம்பி விட்டதால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி அப்படியே திறந்து விடப்படுகிறது.

இதுபோல் சேர்வலாறின் அணையின் நீர்மட்டமும் நிரம்பி வி்ட்டது. இதனால் அதன் உபரி நீரும் தொடர்ந்து வெளியேறறப்படடு வருகிறது. இதனால் தாமிரபரணியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள முண்டத்துறை பாலத்தை மூழ்கடித்து கொண்டு வெள்ளம் ஓடுகிறது. கானா நதி, ராமநதி அணையின் தண்ணீரும் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இந்த நீரும் தாமிரபரணியில் கலக்கிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் நீர் தாமிரபரணியில் கலப்பதால் அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அங்கு கரையோரத்தில் வசித்து வந்த பொது மக்கள் தங்களது உடைமைகள், அத்தியாவசிய பொருட்களுடன் பாதுகாப்பான இடத்தில் ஏற்பாடு செய்துள்ள முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். கருப்பன்துறை தரை பாலத்தில் மேலே தண்ணீர் செல்வதால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மாலை நிலவரப்படி மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 113 அடியாக உயர்ந்தது. இதையடுத்து அசவர கால எச்சரிக்கை விடப்பட்டு அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர். இங்கிருந்து தண்ணீர் திறக்கப்பட்டால் நிச்சயமாக நெல்லை, தூத்துக்குடியின் பல பகுதிகளில் வெள்ளம் புகும் என பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications