துர்நாற்றத்தால் மூச்சு கூட விட முடியவில்லை: மவுலிவாக்கம் மக்கள் அச்சம்
சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் 11 அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள உடல்களில் இருந்து துர்நாற்றம் வருவதால் தங்களுக்கு நோய் தொற்று ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் அஞ்சுகிறார்கள்.

சென்னை மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த 11 அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 49 பேர் பலியாகியுள்ளனர். அதில் 20 பேரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளது. கட்டடம் விழுந்த இடத்தில் இன்று 6வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் உடல்களில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை முதல் துர்நாற்றம் வீசுகிறது.
இந்த துர்நாற்றம் புதன்கிழமை அதிகரித்துள்ளது. இதனால் அந்த இடத்தில் குளோரின் பவுடர், சுண்ணாம்பு பவுடர் ஆகியவை தெளிக்கப்பட்டதுடன் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க தடுப்பூசியும் போடப்பட்டது.
குளோரின் பவுடர் தெளித்த போதிலும் துர்நாற்றம் அப்பகுதியில் பரவி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் குமார் என்பவர் கூறுகையில்,
செவ்வாய்க்கிழமை இரவில் இருந்தே துர்நாற்றம் வீசுகிறது. புதன்கிழமை இது அதிகரித்துவிட்டது. இந்த துர்நாற்றத்தால் மூச்சு கூட விட முடியவில்லை. இதனால் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம். அதனால் சம்பவ இடத்திற்கு அருகில் வசித்து வருபவர்களுக்கும் சுகாதாரத் துறை தடுப்பூசி போட வேண்டும் என்றார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications