பெரிய பாண்டியன் கொலை எதிரொலி... சோகத்தில் சாலைபுதூர் கிராம மக்கள்!
Recommended Video

சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி கேட்டு அவரது சொந்த கிராமமான சாலைபுதூர் சோகத்தில் மூழ்கியுள்ளது.
திருநெல்வேலி : சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் உயிரிழந்த செய்தி கேட்டு அவர் சொந்த ஊரான சாலைபுதூர் கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது. தங்கள் ஊர் கிராம மாணவர்கள் பள்ளிக் கல்வி பெற வேண்டும் என்பதற்காக 20 சென்ட் நிலத்தை தானமாக வழங்கிய பெரியபாண்டியனுக்கா இப்படி ஒரு மரணம் நிகழ வேண்டும் என்று அந்த கிராம மக்கள் கண்ணீர் விட்டு கதறுகின்றனர்.
சென்னை கொளத்தூரில் நகை கடையில் துளையிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை பிடிப்பதற்காக சென்னை மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொள்ளையர்களுடன் நடந்த மோதலில் சுட்டு கொல்லப்பட்டார். இவர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மூவிருந்தாளி பஞ்சாயத்து சாலைபுதூர் கிராமத்தை சேர்ந்தவர்.
கல்லூரி படிக்கும் போதே போலீசில் சேர வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக காவல் துறை தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற்றவர். 2000ம் ஆண்டில் திருச்சி சிறப்பு காவல்படை பட்டாலியனில் பணியில் சேர்ந்தார். 2014ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவரது குடும்பத்தினர் ஆவடி, வசந்தம் நகர், நேரு தெருவில் வசித்து வருகின்றனர்.

ஆசிரியை மனைவி
இவரது மனைவி சென்னையில் அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். மூத்த மகன் சென்னை கல்லூரியிலும், இளைய மகன் பள்ளியில் படித்து வருகின்றனர்.

குடும்பத்தினரோடு பாசம்
இவருக்கு இரண்டு சகோதரர்களும், மூன்று சகோதரிகளும் இருக்கின்றனர். இவருக்கு விவசாயத்தில் ஆர்வம் அதிகம் என்றும், ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் அன்று சகோதரர்கள் வீட்டுக்கு வருவது வழக்கம் என்று உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மாணவர்கள் கல்விக்காக
மூவிருந்தாளி கிராமத்தில் பள்ளிகள் இல்லை என்பதால் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் அமைக்க இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் தனது நிலத்தில் இருந்து 20 சென்ட் தானமாக வழங்கி உதவியுள்ளார். அங்கு தற்போது பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு குழந்தைகள் படித்து வருகின்றனர்.

கவலையில் கிராம மக்கள்
ஊரில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்பவரை இனி காண முடியாதே என்று உறவினர்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். சுட்டு கொல்லப்பட்ட தகவல் சொந்த கிராமத்திற்கு தெரிய வந்ததால் அங்கு சோகம் சூழ்ந்துள்ளது. உறவினர்கள் அவரது வீட்டின் முன்பு கவலையுடன் திரண்டு துக்கம் விசாரித்து வருகின்றனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications