காவிரி: தமிழகம் முழுவதும் பாமகவினர் ரயில் மறியல்- சென்னையில் அன்புமணி கைது!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மாநிலம் முழுவதும் பாமகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எழும்பூரில் ரயில் மறியல் போராட்டம் நடத்திய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி உள்ளிட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் பாமக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதனால் வந்தவாசியில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசுப்பேருந்து இயக்கப்படுவதை கண்டித்து மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சென்னை எழும்பூரில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்புமணி தலைமையில் பி.ஆர். பாண்யடின் மற்றும் பாமகவினர் எழும்பூர் சாலையில் பேரணியாக வந்து இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் ரயிலை மறித்து என்ஜின் மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டதால் ரயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. காவல்துறையினரின் தடையையும் மீறி ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ரயில்வே போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதே போல புதுக்கோட்டை, திருச்சி, திண்டிவனம் உள்ளிட்ட பல ஊர்களில் ரயில் மறியல் போராட்டத்தில் பாமக தொண்டர்கள் ஈடுபட்டனர். திருச்சியில் திண்டுக்கல்- பொள்ளாச்சி ரயில் மீது ஏறி நின்று போராட்டம் நடத்தியதால் ரயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், தொண்டர்களை கைது செய்து வேனில் ஏற்றினர்.

இதனிடையே எழும்பூரில் தடையை மீறி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி, ஏகே மூர்த்தி உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
Chennai: Anbumani Ramadoss's leads Pattali Makkal Katchi's (PMK) black-flag protest to demand for #CauveryManagementBoard pic.twitter.com/VcYYuOGPaj
— ANI (@ANI) April 11, 2018
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications