உளவுத்துறை எச்சரிக்கை: சென்னை ரயில் பேருந்து நிலையங்கள் மால்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
சுதந்திர தினத்தையொட்டி சென்னை மாநகருக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக ரயில் -பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கூடுதல் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
சென்னை: சுதந்திர தினத்தையொட்டி, சென்னைக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக ரயில், பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் எண்ணத்தில் தீவிரவாதிகள் செயல்பட திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவு பிரிவினர் எச்சரித்துள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் கூடுதல் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக நேற்று முன்தினம் முதல் விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. வருகிற 21-ம் தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள தனியார் வணிக வளாகங்களான ஸ்பென்சர் பிளாசா, ஸ்கைவாக், எக்ஸ்பிரஸ் அவென்யூ உள்ளிட்ட வணிக வளாகங்கள் அனைத்திலும் தனியார் பாதுகாவலர்கள் எச்சரிக்கையோடு இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னை மாநகர் முழுவதும் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள் மற்றும் லாட்ஜுகளிலும் சோதனையும், பாதுகாப்பு நடவடிக்கையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications