மூடப்பட்ட மெரீனா சாலைகள் திறப்பு.. வாகனப் போக்குவரத்து தொடங்கியது.. மக்களிடம் உற்சாகம் மிஸ்ஸிங்!
சென்னையில் நடைபெற்ற கலவரத்தின் போது மெரினாவிற்கு செல்லும் சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. குடியரசு தின விழா முடிவடைந்ததையடுத்து 3 நாட்களுக்கு பின்னர் இன்று திறந்து விடப்பட்டுள்ளது.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர போலீசார் கடந்த திங்கள் கிழமை முயற்சி செய்தனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தையடுத்து சென்னை மெரினாவிற்கு செல்லும் பாதைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. அந்த சாலைகள் அனைத்தும் தற்போது திறக்கப்பட்டு போக்குவரத்து சீரடைந்துள்ளது.
6 நாட்களாக ஜல்லிக்கட்டு ஆதரவான போராட்டம் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. இதனை முடித்து கொள்ள மாணவர்களிடம் போலீசார் தீவிரம் காட்டினார்கள். அப்போது மாணவர்கள், இளைஞர்களை போலீசார் அடித்து விரட்டினார்கள். மேலும், மாணவர்கள் யாரும் மெரினா கடற்கரைக்கு மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதற்காக மெரினா செல்லும் சாலைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டது. மேலும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதனால் கடந்த 3 நாட்களாக அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வந்தனர். சாலைகள் அடைக்கப்பட்டிருந்ததால், குறிப்பிட்ட சில சாலை வழியாக மட்டுமே வாகனங்கள் சென்று வந்தன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் செல்ல முடியாமல் மக்கள் அவதிக்குள்ளானார்கள்.
இந்நிலையில், இன்று காலை குடியரசு தின விழா கொண்டாட்டம் முடிவடைந்தது. இதனையடுத்து, மெரினாவிற்கு செல்லும் அனைத்து பாதைகளும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், போலீசார் குவிப்பும் சற்று குறைந்துள்ளது.
டாக்டர் நடேசன் சாலை, அவ்வை சண்முகம் சாலை, ஐஸ் ஹவுஸ் பகுதி, பாரதி சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் போக்குவரத்து இனி சீரடையும் என்று மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications