ரவுடி பினுவின் நண்பர் மாதவனை கரூரில் சுற்றி வளைத்த போலீஸ்
கரூரில் ரவுடி பினுவின் நண்பர் மாதவனை போலீஸார் சுற்றி வளைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர்: கரூரில் ரவுடி பினுவின் நண்பர் மாதவனை போலீஸார் சுற்றி வளைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலத்தை சேர்ந்த பினு, சென்னைக்கு வந்து அங்கு கொலை, கொள்ளை, போதை பொருள் கடத்தல், ஆள் கடத்தல் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வந்தார். இவர் தனக்கென 70-க்கும் மேற்பட்ட ரவுடிகளை சேர்த்துக் கொண்டு தனது தொழிலில் வெற்றி கொடி நாட்டி வந்தார்.
இவருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் இந்த தொழில்களை சற்று நிறுத்தியிருந்தார். அப்போது ராதாகிருஷ்ணன் என்ற ரவுடி பினுவின் இடத்தை பிடித்தார். பினு உடல்நலம் தேறி வருவதற்குள் ராதாகிருஷ்ணன் அபரிமிதமாக வளர்ச்சியை பெற்றுவிட்டார்.

லாரி ஷெட்டில் கொண்டாட்டம்
பல்வேறு வழக்குகளில் பினுவையும் அவரது கூட்டாளிகளையும் போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில் ரவுடி பினுவுக்கு கடந்த இரு நாட்களுக்கு முன்பு பிறந்தநாள் என்பதால் பூந்தமல்லியை அடுத்த மலையாம்பாக்கத்தில் உள்ள லாரி ஷெட் ஒன்றில் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ராதாகிருஷ்ணனை போட்டு தள்ளுவதற்கு பிளானும் போடப்பட்டது.

70 பேர் கைது
இதையடுத்து ரவுடிகள் அனைவரும் குடித்துவிட்டு கும்மாளம் போட்டனர். அப்போது ரவுடிகள் கூடுவது குறித்து முன்கூட்டியே தகவலறிந்த போலீஸார் அவர்களை சுற்றி வளைத்து 70-க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்தனர்.

சேலத்தில் தஞ்சம்
அப்போது பினு, கனகு, விக்கி ஆகிய 3 பேர் மட்டும் தப்பி சென்றனர். பினுவுக்கு சேலத்தில் உள்ள மருத்துவர் ஒருவர் அடைக்கலம் கொடுத்ததாக வந்த தகவலை அடுத்து தனிப்படை போலீஸார் அங்கு சென்றனர்.

திருவள்ளூரில் பதுங்கல்
இந்நிலையில் ரவுடி பினுவின் கூட்டாளி முகேஷ் என்பவரை தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கைது செய்தனர். ஆனால் பினுவும் அவரது கூட்டாளிகளும் திருவள்ளூர் மாவட்டத்தில் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்தது.

கரூரில் மாதவன் கைது
இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட போலீஸார், 3 ரவுடிகளையும் பிடிக்க தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கரூரில் ரவுடி பினுவின் நண்பர் மாதவனை சுற்றி வளைத்த போலீஸார் அவரிடம் துருவி துருவி விசாரணை மேற்கொண்டு விட்டு அவரை விடுவித்தனர். எனினும் மாதவனை ரகிசயமாக கண்காணிக்கவும் போலீஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications