சென்னை குண்டுவெடிப்பு தொடர்பாக நான்கு மாநிலங்களில் போலீஸ் விசாரணை
சென்னை: சென்ட்ரல் குண்டுவெடிப்பு தொடர்பாக நான்கு மாநிலங்களில் தமிழக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த வியாழக்கிழமை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கவுஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடித்து இளம் பெண் ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் படுகாயமடைந்தனர்.
இதுதொடர்பாக குறிப்பிட்ட ரயில் புறப்பட்ட பெங்களூருக்கும், ரயில் சென்னைக்கு அடுத்ததாக செல்லவிருந்த ஆந்திர மாநிலத்துக்கும், ரயில் சென்று சேரும் அசாம் மாநிலத்துக்கும் சிபிசிஐடி போலீஸ் படைகள் விரைந்துள்ளன.

பிகாரில் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திரமோடி தேர்தல் பிரச்சாரம் செய்தபோது நடந்த குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட அதே வகை குண்டுதான் சென்னை ரயில் நிலையத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே அந்த கோணத்தில் விசாரிப்பதற்காக மற்றொரு குழு பிகார் விரைந்துள்ளது.
இதனிடையே, சென்னைக்கு ரயில் வரும் முன்பாக, அரக்கோணத்தின் அருகே அந்த ரயில் சிறிது நேரம் நடுவழியில் நின்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது. குவஹாத்தி ரயிலுக்கு முன்பாக மைசூரிலிருந்து சென்னை வந்த வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தது. அந்த ரயிலின் அபாய சங்கிலியை யாரோ பிடித்து இழுந்துள்ளனர்.
இதனா் அரக்கோணம் அருகேயுல்ள மகேந்திரவாடி மற்றும் சித்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் நிறுத்தப்பட்டது. ஆனால் யார் அதை இழுத்தார்கள் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த ரயில் தண்டவாளத்தில் நின்றதால் பின்னால் வந்த கவுஹாத்தி ரயிலும் அதிகாலை 5.33 மணி முதல் 5.39 மணிவரை நடுவழியில் நிறுத்தப்பட்டது.
வெடிகுண்டு வைத்த குற்றவாளி கவுஹாத்தி ரயிலில் இருந்து கீழே இறங்குவதற்காக இதுபோன்ற நாடகம் நடத்தப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரிக்கிறார்கள்.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம்












Click it and Unblock the Notifications