சென்னை குண்டுவெடிப்பு தொடர்பாக நான்கு மாநிலங்களில் போலீஸ் விசாரணை
சென்னை: சென்ட்ரல் குண்டுவெடிப்பு தொடர்பாக நான்கு மாநிலங்களில் தமிழக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த வியாழக்கிழமை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கவுஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடித்து இளம் பெண் ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் படுகாயமடைந்தனர்.
இதுதொடர்பாக குறிப்பிட்ட ரயில் புறப்பட்ட பெங்களூருக்கும், ரயில் சென்னைக்கு அடுத்ததாக செல்லவிருந்த ஆந்திர மாநிலத்துக்கும், ரயில் சென்று சேரும் அசாம் மாநிலத்துக்கும் சிபிசிஐடி போலீஸ் படைகள் விரைந்துள்ளன.

பிகாரில் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திரமோடி தேர்தல் பிரச்சாரம் செய்தபோது நடந்த குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட அதே வகை குண்டுதான் சென்னை ரயில் நிலையத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே அந்த கோணத்தில் விசாரிப்பதற்காக மற்றொரு குழு பிகார் விரைந்துள்ளது.
இதனிடையே, சென்னைக்கு ரயில் வரும் முன்பாக, அரக்கோணத்தின் அருகே அந்த ரயில் சிறிது நேரம் நடுவழியில் நின்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது. குவஹாத்தி ரயிலுக்கு முன்பாக மைசூரிலிருந்து சென்னை வந்த வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தது. அந்த ரயிலின் அபாய சங்கிலியை யாரோ பிடித்து இழுந்துள்ளனர்.
இதனா் அரக்கோணம் அருகேயுல்ள மகேந்திரவாடி மற்றும் சித்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் நிறுத்தப்பட்டது. ஆனால் யார் அதை இழுத்தார்கள் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த ரயில் தண்டவாளத்தில் நின்றதால் பின்னால் வந்த கவுஹாத்தி ரயிலும் அதிகாலை 5.33 மணி முதல் 5.39 மணிவரை நடுவழியில் நிறுத்தப்பட்டது.
வெடிகுண்டு வைத்த குற்றவாளி கவுஹாத்தி ரயிலில் இருந்து கீழே இறங்குவதற்காக இதுபோன்ற நாடகம் நடத்தப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரிக்கிறார்கள்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications