சயானை சந்திக்க கேரள போலீசாருக்கு அனுமதி மறுத்தது ஏன்? மருத்துவமனை பரபரப்பு விளக்கம்
கொடநாடு கொள்ளை மற்றும் கொலையில்,சம்பந்தப்பட்ட சயான் கார் விபத்தில் சிக்கி கோவை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.அவரைச் சந்திக்க இன்று வந்த கேரள போலீஸாருக்கு மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத
கோவை:கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவத்தில் தொடர்புடைய சயான் கார் விபத்தில் சிக்கி கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.இந்த நிலையில்,சயானை சந்தித்து விசாரிக்க வந்த கேரள மாநில போலீசாருக்கு,மருத்துவமனை நிர்வாகம் அனுமதியளிக்க மறுத்துள்ளது.
முறையான ஆவணங்கள் இல்லாமல் கேரளா காவல்துறையினர் விசாரணை செய்ய வந்ததால் அனுமதிக்கவில்லை என கோவை தனியார் தலைமை மருத்துவர் சுந்தராஜன் தெரிவித்தார்.

கடந்த 29ம் தேதி சயான் வந்த கார் விபத்துக்குள்ளானதில் மனைவி வினுப்பிரியா மற்றும் குழந்தை நீத்து உயிரிழந்தனர். படுகாயமடைந்த சயானுக்கு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் சயானை சந்திக்க வந்த கேரளா போலீசாருக்கு தனியார் மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்தது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தனியார் மருத்துவமனை தலைமை மருத்துவர் சுந்தர்ராஜன், சயானின் உடல் நிலை நலமுடன் இருப்பதாகவும், தீவிர
சிகிச்சை பிரிவில் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். முறையான அனுமதியுடன் சயானை சந்திக்க வந்தால் கேரள
போலீசாருக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் இரு முறை வந்த போதும் கேரள போலீசார் முறையான அனுமதி இல்லாமலும், உள்ளூர் காவல் துறை அனுமதி இல்லாமலும் சயானை சந்திக்க வந்ததால் அனுமதி வழங்கவில்லை என்றும் மருத்துவர் சுந்தர்ராஜன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,"சயானுடன் உறவினர்கள் யாரும் இல்லை, தங்கள் மருத்துவமனைக்கு கொண்டு வந்ததால் அவருக்குச் சிகிச்சை அளித்து வருகிறோம்." என்றார்.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications