கதிராமங்கலத்தில் இருந்து போலீஸ் வெளியேறியது- மெல்ல திரும்பும் இயல்புநிலை
கதிராமங்கலத்தில் இருந்து போலீஸ் வெளியேறியதால் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
தஞ்சாவூர்: கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலத்தில் குவிக்கப்பட்டிருந்த போலீசார் வெளியேறி வருவதால் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
கதிராமங்கலத்தில் உள்ள காவல்துறையை உடனே வெளியேற்ற வேண்டும். இல்லையென்றால் முதல்வர் இல்லம் அல்லது தலைமை செயலகத்தில் முற்றுகையிட்டு ஒப்பாரி போராட்டம் நடத்தப்படும் என்று அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து போலீசார் வெளியேறி வருகின்றனர்.

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் குழாயில் இருந்து வெள்ளிக்கிழமையன்று கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதால், அச்சமடைந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அரசு அதிகாரிகளை ஊருக்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தினர்.
சாலையில் கிடந்த முட்செடிகளையும், வைக்கோல்போர்களையும் மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தியதால், அது கொழுந்து விட்டு எரிந்தது. தீயை அணைப்ப தற்காக போலீஸார் சென்றபோது, பொதுமக்கள் கல்வீசி தாக்கினர். ஆத்திரமடைந்த போலீசார் பொது மக்கள் மீது தடியடி நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். ஏராளமானோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து கடந்த 4 நாட்களாக கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. கதிராமங்கலத்தில் போலீசார் குவிக்கப்பட்டதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. போலீசாரை வெளியேற்ற வேண்டும் என்று சட்டசபையிலும் திமுக எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர்.
10 பேர் மீது போடப்பட்ட பொய் வழக்கினை திரும்ப பெற வேண்டும் என்றும் போலீசார் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் பொதுமக்களும், அரசியல் கட்சித்தலைவர்களும் வலியுறுத்தினர். இந்த நிலையில் போலீசார் வெளியேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
90 சதவிகித போலீசார் வெளியேறி வருவதால் இயல்பு நிலை திரும்பி வருவதாக கூறப்படுகிறது. அடைக்கப்பட்டிருந்த கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. இன்று ஆட்சியர் அண்ணாதுரை கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications