ஆம் ஆத்மி கட்சி விவகாரம்: உதயகுமார், புஷ்பராயன் நட்பில் விரிசல்!

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் கடலோரத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு மின் நிலையத்துக்கு எதிராக அணு உலை எதிர்ப்பாளர்கள் கடந்த பல ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் சுப.உதயகுமார் தலைமையில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நெல்லைக்கே வந்து கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் அவர் உதயகுமார் போன்றவர்கள் ஆம் ஆத்மி கட்சியில் சேர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பை ஏற்று இடிந்தகரை கிராமத்தில் கிழக்கு அந்தோணியார் ஆலயத்தில் ‘ஆம் ஆத்மி' கட்சி தமிழக தேர்தல் பணிக்குழு தலைவர் டேவிட் பரூக் குமார் முன்னிலையில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில், மைபா.ஜேசுராஜ், மில்டன், கெபிஸ்டன், முகிலன் ஆகியோரும், நூற்றுக்கணக்கானவர்களும் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தனர்.
இந்த போரட்டத்தில் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வரும் புஷ்பராயன் ஆம் ஆத்மி கட்சியில் சேரவில்லை. நமக்கு அரசியல் பாதை தேவையில்லை என்ற கருத்தில் புஷ்பராயன் உறுதியாக உள்ளார்.
இது குறித்து உதயகுமார் கூறுகையில்,
எங்களின் கோரிக்கையை அனைத்து கட்சியினரிடமும் வைத்தோம். குறிப்பாக, மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் போன்ற சிலரே எங்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். அது தான் எங்களுக்கு பாதுகாப்பை தந்தது. எங்கள் கருத்தையும், பாதுகாப்பையும் வலுப்படுத்த நாடாளுமன்றத்தில் கூடுதல் எம்.பிக்கள் தேவை. அதனால் தான் தேர்தல் பாதையை தேர்வு செய்ய நேரிட்டுள்ளது என்றார்.
ஆனால் இடிந்தகரையில் உள்ள பெரும்பாலான பொது மக்கள், ஒன்றாக இருந்து எங்களுக்காக, இரவு பகல் பாராமல் போராட்டம் நடத்திய சுப. உதயகுமாரையும், புஷ்பராயனையும் இந்த பாலும் அரசியல் பிரித்துவிட்டதே என ஆதங்கப்படுகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications