மத ரீதியாக மக்களை பிரித்தாள்வதில் கைதேர்ந்த பாஜக அடுத்தவர்கள் மீது பழிபோடுவது ஏன்?- பிரகாஷ்ராஜ்
சென்னை: கர்நாடகத்தில் மத, இன ரீதியாக மக்களை பிரித்தாள்வதில் கைதேர்ந்த பாஜகவினர் அடுத்தவர்கள் மீது அந்த பழியை போடுவது ஏன் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு லிங்காயத்துக்களை தனி மதமாக அறிவித்துள்ளது. இதை காங்கிரஸ் அரசு மதத்தால் மக்களை பிரிப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ் கடுமையான கருத்துகளை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் பாஜகவின் குற்றச்சாட்டுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிலளிக்கையில், கர்நாடகாவில் மத, இன ரீதியாக மக்களை பிரித்தாள்வதில் பாஜகவினர் கைதேர்ந்தவர்கள்.
அப்படியிருக்கும்போது அந்த பழியை ஏன் அடுத்தவர்கள் மீது போடுகிறீர்கள். ஏன் பிரித்தாளும் நடவடிக்கைகளை செய்து செய்து உங்களுக்கே கசந்துவிட்டதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Joke of the day.... “ #bjp accusing others of polarising and dividing people along communal lines in Karnataka .. “ why are you crediting others for a TALENT ....of which only you are the masters....Or are you tasting your own bitter pill ....#justasking
— Prakash Raj (@prakashraaj) March 25, 2018
இவர் #justasking என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மேலும் கர்நாடகாவில் வெளியாகும் தினசரி நாளிதழ்களில் பாஜகவுக்கு எதிராக தலையங்கங்களையும் அவர் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications