உண்டு உறைவிட பள்ளியில் ரத்தம்! மயங்கிய மாணவிகள்! "பேய்" ஓட்டிய பூசாரி.. கல்வராயன்மலையில் "திக் திக்"
கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலை உண்டு உறைவிடப் பள்ளியில் மயங்கி விழுந்த மாணவிக்கு திருநீர் வீசி பேய் ஓட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் உள்ள கொட்ட புத்தூர் அரசு மழைவாழ் உண்டு உறைவிடப் பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த மலைவாழ் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தனி விடுதி கட்டடம் இல்லாததால் வகுப்பறையிலேயே தங்கி வருவதாக கூறப்படுகிறது. 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி பயின்று வரும் இந்த பள்ளியில் விடுதி காப்பாளர் , காவலாளி இல்லாமல் உள்ளது.

அடிப்படை வசதி
அது போல் அடிப்படை வசதிகளான தண்ணீர் மற்றும் கழிப்பறை கட்டடங்கள் இல்லை. ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறை கட்டடம் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வராத நிலையில் உள்ளது. ஒரே நேரத்தில் 4 மாணவிகள் பயன்படுத்தக்கூடிய சிறிய கழிப்பறை கட்டடத்தில் தண்ணீர் வசதி இல்லை.

பள்ளி கட்டடம்
இதனால் அருகில் உள்ள பள்ளி கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீரை வாளியில் எடுத்துக் கொண்டு 20 அடி உயரமுள்ள கழிப்பறை கட்டடத்திற்கு சென்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு பள்ளியில் தங்கியிருந்த மாணவி ஒருவர் மன உளைச்சல் காரணமாக தன் கையை பிளேடால் அறுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

மளமளவென கொட்டிய ரத்தம்
இதையடுத்து அவரது கையில் இருந்து ரத்தம் மளமளவென வெளியே வந்தது. இதனால் அந்த மாணவி மயங்கி விழுந்தார். ரத்தத்தை கண்ட அதிர்ச்சியில் இன்னொரு மாணவியும் மயங்கி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காலையில் எழுந்த மாணவிகள் கழிப்பறைக்கு செல்வதற்காக அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பிடித்துக்கொண்டு சென்ற போது கீழே சிதறிக் கிடந்த ரத்தக் கறைகளை பார்த்துள்ளனர்.

பதற்றம்
உடனே அந்த மாணவியும் பதற்றத்தில் கீழே விழுந்தார். இதனால் அந்த மாணவிக்கு ரத்தம் கொட்டி உள்ளது. இவ்வாறு அடுத்தடுத்து மாணவிகள் கீழே விழுந்ததற்கான உண்மையான காரணத்தை அறியாத மற்ற மாணவிகள் கத்தி கூச்சல் போட்டுள்ளனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

ரத்த கறை
அந்த இடத்தில் இருந்த ரத்தத்தையும் மாணவிகள் அச்சத்துடன் இருந்ததையும் பார்த்துவிட்டு பேய் பிடித்துவிட்டதாக தவறாக எண்ணி பேய் ஓட்ட பூசாரியை வரவழைத்தனர். இதையடுத்து அங்கு வந்த பூசாரி,"இந்த பசங்க விட்டு போய்டு.. இல்லே விபூதியால் அடிப்பேன்" என பூசாரி மிரட்டினார். ஆனால் "பேய்" (பேய் பிடித்திருந்தால்தானே) பூசாரியின் மிரட்டலுக்கு அசரவில்லை.

கோபமடைந்த பூசாரி
இதனால் கோபமடைந்த பூசாரி அந்த மாணவிகள் மீது விபூதியை வீசினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் பள்ளி இயங்கும் நேரம் வந்துவிட்டதால் ஆசிரியர்கள் ஒவ்வொருவராக வரவர அவர்களுக்கு விஷயம் தெரிந்து மாவட்ட மருத்துவமனைக்கு தகவல் அளித்து ஆம்புலன்ஸ் வாகனம் வரழைக்கப்பட்டது. மயங்கி விழுந்த 4 மாணவிகளும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை
அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து விசாரணை நடத்தியதில் கையை பிளேடால் அறுத்துக் கொண்ட மாணவி, தங்கள் விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பெரும் மன உளைச்சலாக இருக்கிறது என்றும் இரவு நேரத்தில் பாத்ரூம் செல்ல அச்சமாக இருப்பதாகவும் பெண் விடுதி காப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்குமாறு சமூகஆர்வலர்களும் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications