புதுச்சேரிக்கு நிதி கொடுக்காமல் அல்வா கொடுத்தது பிரதமர் மோடி.. சீறும் நாராயணசாமி!
புதுச்சேரிக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் பிரதமர் மோடிதான் அல்வா கொடுத்ததாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video

புதுச்சேரி: நிதி ஒதுக்கீடு செய்யாமல் பிரதமர் மோடிதான் அல்வா கொடுத்ததாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
பக்கோடா விற்பதும் வேலை வாய்ப்புதான் என பிரதமர் மோடியும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் கூறியிருந்தனர். இதற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில் மத்திய அரசைக் கண்டித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடந்த வாரம் இளைஞர் காங்கிரஸாருடன் சேர்ந்து பக்கோடா விற்றார்.

நாராயணசாமி அல்வா கடை
பக்கோடா விற்ற நாராயணசாமிக்கு கவுன்டர் கொடுக்கும் புதுச்சேரி பாஜகவினர் 2 நாட்களுக்கு முன்பு ‘நாராயணசாமி‘ என்ற பெயரில் அல்வா கடை திறந்தனர். மக்களுக்கான திட்டங்களை அறிவிக்காமல் முதல்வர் நாராயணசாமி அல்வா கொடுப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

மோடி தான் அல்வா தருகிறார்
இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, புதுச்சேரிக்கு தேவையான நிதியை கொடுக்காமல் பிரதமர் மோடிதான் அல்வா கொடுப்பதாக குற்றம்சாட்டினார்.

மாற்றாந்தாய் மனப்பான்மை
மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் புதுச்சேரியை பார்ப்பதாகவும் நாராயணசாமி குற்றம்சாட்டினார். இதைத்தொடர்ந்து தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படத்திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்காதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

கட்சியின் நிலைப்பாடே
அதற்கு பதிலளித்த நாராயணசாமி கட்சியின் நிலைப்பாடே தனது நிலைப்பாடு என்றும் நாராயணசாமி தெரிவித்தார். தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படத்திறப்பு நிகழ்ச்சியை காங்கிரஸ் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications