காவிரி: மத்திய அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - ம.ந.கூட்டணி
சென்னை: காவிரி விவகாரத்தில், தமிழகத்திற்கு, மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளதைக் கண்டித்து வரும் 7-ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மக்கள் நலக்கூட்டணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், காவிரி நதி நீர் பிரச்சனையில் அக்டோபர் 4-ந் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் இன்று (3.10.2016) மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது; நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிய பின்னரே அமைக்க முடியும்; இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட முடியாது" என்றும் தெரிவித்து இருக்கின்றது.
அரசியல் சட்டத்தின்படியும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் காவிரி நடுவர்மன்றம் அமைக்கப்பட்டது. காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்குமுறை குழுவையும் அமைக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக மத்திய அரசு இக்கடமையினை நிறைவேற்ற தவறிவிட்டது.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் காவிரி மேம்பாட்டு ஆணையத்தை அமைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ள நிலையில் மத்திய அரசு அதை நிறைவேற்ற மறுப்பது தமிழகத்தை வஞ்சிக்கும் செயலாகும். மேலும் அரசியல் ஆதாயத்திற்காக கர்நாடகத்திற்கு ஆதரவாக இவ்வாறு தெரிவித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத மத்திய பாஜக அரசின் இந்நிலைபாடு கூட்டாட்சி கோட்பாட்டிற்கே விரோதமானது.
அரசியல் சட்டத்திற்கும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கும் விரோதமாக நடந்து கொள்ளும் மத்திய பாஜக அரசின் அணுகுமுறையை கண்டித்து 7.10.2016 அன்று தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மக்கள் நலக் கூட்டணி கட்சிகளின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், வியாபாரிகள், பொதுமக்கள், அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் சகோதர அமைப்புகள் ஆதரவளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications