சாத்தூரில் தற்காலிக ஊழியர்கள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதலால் பதற்றம்
தற்காலிக ஊழியர்களை போக்குவரத்து கழகம் நியமனம் செய்துள்ள நிலையில், அவர்களை பேருந்துகளை இயக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
Recommended Video

விருதுநகர்: பேருந்துகளை இயக்க சென்ற தற்காலிக ஊழியர்கள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் இன்று தீவிரமடைந்தது. அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சில சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மட்டுமே பேருந்துகளை இயக்கினர். பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இந்நிலையில் விருதுநகர் சாத்தூரில் பேருந்துகளை இயக்க முயன்ற தற்காலிக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் மீது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஓட்டுனர்களும், நடத்துனர்களும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதேநிலை பல்வேறு மாவட்டங்களில் தொடர்வதால் பேருந்துகளை இயக்க தற்காலிக ஊழியர்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்தும் அரசு போக்குவரத்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் உள்ளிட்டோரை மீறி பேருந்துகளை இயக்க தற்காலிக பணியாளர்கள் தயங்குவதாக தெரிகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தொழிற்சங்க நிர்வாகிகள், இது போக்குவரத்து கழகத்தின் பலே திட்டம் எனக் கூறியுள்ளனர். தற்காலிக ஊழியர்களை பலி ஆடு போல பணிக்கு எடுத்து, அவர்களை பேருந்துகளை இயக்கவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை வெறி ஏற்றிவிடுவது தான் கழகத்தின் திட்டம்.
மேலும் இவ்வாறு ஓட்டும் தற்காலிக ஊழியர்களை ஆத்திரத்தில் போராட்டக்காரர்கள் தாக்கி விட்டால் அதையே காரணம் காட்டி இந்த போராட்டத்தை சட்ட ஒழுங்கு பிரச்சனையாக மாற்றி, போலீசார் துணையுடன் எங்களை அடித்து உதைத்து போராட்டத்தை ஒடுக்குவதற்காக தான் போக்குவரத்து கழகம் இந்த பலே திட்டத்தை தீட்டியுள்ளது என்றும் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
யார் பலே திட்டம் தீட்டினாலும், தற்காலிக பணியாளராக வருவது உங்களில் ஒருவன் தான், அவனுக்கும் குடும்பம் இருக்கிறது, அவங்களுக்கும் வயிறு இருக்கிறது என்பதை எண்ணி போராட்டக்காரர்கள் கண்ணியத்துடன் நடந்துக்கொள்ள வேண்டும் என்பது தான் அனைவரின் எண்ணமாக உள்ளது.
-
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications