தூர் வாரியதாக பொய்க் கணக்கு - பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு சிறை
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே குளத்தில் தூர் வாரியதாக பொய்க் கணக்கு எழுதி பண மோசடி செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் இருவருக்கு கோர்ட் சிறை தண்டனை விதித்துள்ளது.
நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அருகே உள்ளது அனந்தன்குளம். இந்த குளத்தை புதுப்பித்து தூர் வாரியதாக பொதுபணித்துறை கணக்கு காட்டியுள்ளது.

குளத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். காரணம் முன்பு குளம் எப்படி இருந்ததோ அதே மாதிரிதான் தற்போதும் இருக்கிறது. தூர் வாரியதற்கான அறிகுறியே இல்லை. இதுகுறித்து அவர்கள் தமிழக அரசுக்கு புகார் மனுக்களை அனுப்பினர்.
அதில் அனந்தன்குளத்தை தூர் வாராமல் வாரி விட்டதாக அதிகாரிகள் பொய் கணக்கு காட்டியுள்ளதாக குற்றம் சாட்டினர். அதன் பேரில விசாரணை நடத்த குமரி மாவட்ட லஞ்ச ஓழிப்பு துறைக்கு உததரவிடப்பட்டது.
லஞ்ச ஓழிப்பு போலீசாரின் தீவிர விசாரணையில் பொதுமக்கள் கூறியது உண்மைதான். குளத்தை தூர் வாராமல் ரூபாய் 6 லட்சத்து 32 ஆயிரத்து 195ஐ உதவி செயற் பொறியாளர் மரிய அலோசியஸ், உதவி பொறியாளர் சுப்பிரமணியன், ஓப்பந்தகாரர் ராஜகோபால் ஆகியோர் கையாடல் செய்து விட்டதாக தெரிய வந்தது.
இதுகுறித்து அவர்கள் மேற்கண்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை குமரி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி முருகையா அவர்களுக்கு பொறியாளர்களுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ஓப்பந்தகாரருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications