தமிழ்நாட்டு மக்களின் கஷ்டத்தை ரஜினிதான் போக்குவார்.. நண்பர் ராஜ்பகதூர் பொளேர்
தமிழ்நாட்டு மக்களின் கஷ்டத்தை ரஜினிதான் போக்குவார் என அவரது நண்பர் ராஜ்பகதூர் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டு மக்களின் கஷ்டத்தை ரஜினிதான் போக்குவார் என அவரது நண்பர் ராஜ்பகதூர் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் பிரச்சனையைதான் முதலில் தீர்ப்பார் என்றும் அவர் கூறினார்.
ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் சென்னையில் 5 நாட்கள் போட்டோர் எடுக்கும் நிகழ்ச்சியை மேற்கொண்டார். அப்போது ரசிகர்கள் மத்தியில் தனது அரசியல் பிரவேசம் குறித்து பேசினார்.

இது தமிழக மற்றும் தேசிய கட்சிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து நாள்தோறும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பும் வரவேற்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த ரஜினியின் நெருங்கிய நண்பர் ராஜ்பகதூர் சன்நியூஸ் தொலைக்காட்சி ஒன்றிற்கு சிறப்பு நேர்க்காணல் அளித்துள்ளார். அதில் ரஜினியால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும் என கூறினார்.
ரஜினிகாந்த் சம்பள விஷயத்தில் வெளிப்படையாக இருப்பவர் என்றும் அவர் கூறினார். தமிழக மக்களின் அனைத்து பிரச்சனைக்கும் ரஜினிகாந்த் தீர்வு காண்பார் என்றும் ராஜ்பகதூர் தெரிவித்தார்.
விவசாயிகள் மற்றும் ஏழைகள் பிரச்சனையை ரஜினிகாந்த் தீர்ப்பார் என்றும் அவர் கூறினார். ரஜினி அரசியலில் தேர்ச்சி பெற்றிருக்கிறார் என்றும் அவரது நண்பர் ராஜ்பகதூர் தெரிவித்தார்.
காசு பணம் சம்பாதிக்க பார்க்க ரசிகர்களை, ஊழல் செய்பவர்களை ரஜினிகாந்த் கிட்டவே சேர்க்க மாட்டார் என்றும் அவர் கூறினார். மேலும் ரஜினிகாந்த் காவிரி பிரச்சனையை தீர்த்து தண்ணீர் பெற்றுத்தருவார் என்றும் அவர் கூறினார்.
7 கோடி தமிழர்களும் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். ரஜினி அரசியலுக்கு வந்தால் ஒரு ரூபாய் கூட திருட மாட்டார் என்றும் திருடுபவர்களையும் அனுமதிக்க மாட்டார் என்றும் அவர் ராஜ்பகதூர் உறுதியாக கூறினார்.












Click it and Unblock the Notifications