ராம்குமார் தற்கொலை முயற்சியில் ஈடுபட வாய்ப்பே இல்லை: வழக்கறிஞர் ராமராஜ்
சென்னை: ராம்குமார் தற்கொலை முயற்சியில் ஈடுபட வாய்ப்பில்லை என அவரது வழக்கறிஞர் ராமராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் பொறியாளர் சுவாதி. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இந்த வழக்குத் தொடர்பாக நெல்லையைச் சேர்ந்த இளைஞர் ராம்குமார் கைது செய்யப்பட்டார்.

அப்போது தனது கழுத்தை அறுத்துக் கொண்டு ராம்குமார் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து நெல்லையில் சிகிச்சை பெற்ற ராம்குமார், பின்னர் சென்னை கொண்டு வரப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை புழல் சிறையில் மின்கம்பியைக் கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார்.
ஆனால், ராம்குமார் தற்கொலை முயற்சியில் ஈடுபட வாய்ப்பில்லை என அவரது சார்பில் வாதாடி வந்த வழக்கறிஞர் ராமராஜ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர், 'நேற்று தான் ராம்குமாரை சிறையில் சந்தித்ததாகவும், அப்போது அவர் நல்ல மனநிலையில் இருந்ததாகவும், விரைவில் தன்னை பெயிலில் எடுக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும்' தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சுவாதியை ராம்குமார் கொலை செய்யவில்லை என்றும், விரைவில் உண்மைக் குற்றவாளிகளை அம்பலப் படுத்துவோம் என்றும் ராமராஜ் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications