ரேஷன் கடைகளில் "கோதுமைத் திணிப்பு"... விலையில்லா அரிசிக்குப் பதில்!
அனைத்து ரேஷன் கடைகளிலும் விலையில்லா அரிசிக்கு பதிலாக விலையில்லை கோதுமையை பயனாளிகள் பெற்றுக் கொள்ளலாம் என்று உணவு துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
சென்னை: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அனைத்து பொருள்களும் வழங்கப்படும் என்றும் விலையில்லா அரிசிக்கு பதிலாக விலையில்லா கோதுமையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
தமிழக அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவு மற்றும் கூட்டுறவு துறை சார்பில் ரேஷன் கடைகளில் இலவச அரிசி மற்றும் சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய் ஆகிய பொருட்கள் மானியவிலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சிறப்பு பொது வினியோக திட்டத்தை கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் செயல்படுத்துவதற்கு தமிழக அரசு சுமார் ரூ.1,158 கோடி ஒதுக்கீடு செய்தது. ஆனால் 2016-17-ம் நிதி ஆண்டு இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை எனத் தெரிகிறது.
இதனால் பருப்பு வகைகள், பாமாயில் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கோரப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக ரேஷன் கடைகளில் மானிய விலையில் வழங்கப்பட்டு வந்த பருப்பு வகைகள், பாமாயில் விற்பனை அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த புகாருக்கு பதிலளிக்கும் வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு திட்டமும், விலையில்லா அரிசி திட்டமும் தொடர்ந்து வழங்கப்படுகிறது. விலையில்லா அரிசிக்கு பதிலாக விலையில்லா கோதுமையை பெற்றுக் கொள்ளலாம்.
பருப்பு, பாமாயில் ஆகிய பொருள்களுக்கான மானியத்தை மத்திய அரசு நிறுத்தியபோதிலும், ரூ.1,800 கோடி மானியத்தை தமிழக அரசே ஏற்றுக் கொண்டது. எனவே ரேஷன் பொருள்கள் நிறுத்தப்பட்டதாக கூறுவது வதந்தி என்றார் அவர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications