ரேஷன் பொருட்களை ரத்து செய்யப்போகிறார்கள்.. ஒரு வருடம் முன்பே கூறிய திருமுருகன் காந்தி.. வைரல் வீடியோ
சென்னை: படிப்படியாக ரேஷன் பொருட்கள் ரத்து செய்யப்படப்போகிறது, பொது வினியோகத்தை மூடப்போகிறார்கள் என்று, ஒரு வருடம் முன்பே மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறிய வீடியோ காட்சி வைரலாகியுள்ளது.
ரேஷன் பொருட்கள் வினியோகத்தை கட்டுப்படுத்தும் வகையிலான உணவு பாதுகாப்பு சட்டத்தை ஏற்றுள்ள தமிழக அரசு அதுகுறித்து அரசிதழில் இன்று வெளியிட்டது. இதனால் மக்களிடம் பீதியேற்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருமுருகன் காந்தி ஓராண்டு முன்பே பேசிய வீடியோ வைரலாகியுள்ளது. அதில் திருமுருகன் காந்தி கூறியுள்ளதாவதுச
அரசு இனி அரிசியை சேமிப்பதோ, கொள்முதல் செய்யப்போவதோ இல்லை. இந்திய விவசாயிகளுக்கு மானியம் நிறுத்தப்படும். ஆனால் அமெரிக்கா அவர்கள் விவசாயிகளுக்கு மானியம் கொடுப்பார்கள். 2017க்கு பிறகு ரேஷன் கடைகளில் அரிசி கொடுக்கப்போவதில்லை. காஸ் மானியம் போல அரிசிக்கும் மானியம் கொண்டுவருவதாக அறிவிப்பார்கள். ஏழை, எளிய மக்களுக்கு இனி அரிசி மலிவு விலையில் கிடைக்காது.
ரேஷன் கடைகளுக்கு மொத்தமாக மூடு விழா நடத்தப் போவதை தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தவர் திருமுருகன் காந்தி. இப்போ அது நடக்குது 😴 pic.twitter.com/WNARQ1rFsK
— நைனா 🙏 (@Writer_Naina) July 31, 2017
அதேநேரம் வெளிநாட்டிலிருந்து அரிசியை குறைந்த விலையில் இறக்குமதி செய்வார்கள். உர மானியம், மின்சார மானியம் எதையும் இந்திய விவசாயிகளுக்கு அரசு தரப்போவதில்லை என்பதால் நமது விவசாய உற்பத்தியின் விலை அதிகமாக இருக்கும். இதனால் நமது விவசாயிகள் அழிவை நோக்கி செல்வார்கள்.
இது மோடி அரசாங்கத்தின் குற்றம் மட்டுமல்ல, எதிர்க்கட்சியான காங்கிரசும் இதை பற்றி பேசவேயில்லை. 3வது பெரிய கட்சியாக இருக்கும் அதிமுகவும் பேசவில்லை. திமுகவும் பேசவில்லை.
ஒரு வருசம் முன்ன திருமுருகன் காந்தி சொன்னது..... pic.twitter.com/iEdxeGtjsU
— வந்தியத்தேவன் (@kalasal) July 31, 2017
உலக வர்த்தக சபையில் இந்தியா கையெழுத்திட்டது பற்றி மிக ரகசியமாக வைத்துள்ளார்கள். பொது வினியோகத்தை மூடப்போகிறார்கள். விவசாயிகள், நெசவாளர்கள், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் முடிக்கப்பட்டுவிடும். இவ்வாறு திருமுருகன் காந்தி பேசிய வீடியோ இப்போது வைரலாகிறது. தற்போது திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications