ஓகி புயலில் சிக்கிய தமிழக மீனவர்கள்... தகவல்களை இருட்டடிப்பு செய்கிறதா தமிழக அரசு?
ஓகி புயலில் சிக்கிய தமிழக மீனவர்கள் தொடர்பான தகவல்கள் இருட்டடிப்பு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கன்னியாகுமரி: ஓகி புயலில் தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல்களை மாநில அரசு இருட்டடிப்பு செய்கிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத் தாழ்வு நிலை ஓகி புயலாகி மாறி கன்னியாகுமரி மாவட்டத்தை உருக்குலைத்துப் போட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் அவற்றை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தகவல்கள் இல்லை
அதே நேரத்தில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் தொடர்பான தெளிவான தகவல் எதுவும் தமிழக அரசு சார்பில் வெளியிடப்படாதது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநில முதல்வர் தொடர்ந்து மீட்கப்பட்ட மீனவர்கள், மீட்பு நடவடிக்கைகள் குறித்து விவரித்து வருகிறார்.

எத்தனை மீனவர்கள் எங்கே?
ஆனால் தமிழக அரசு எத்தனை பேர் மீன்பிடிக்க போனார்கள்? எத்தனை பேர் எங்கெங்கே கரை ஒதுங்கியுள்ளனர்? எஞ்சிய மீனவர்கள் நிலைதான் என்ன? என்பது குறித்து எந்த ஒரு தெளிவான தகவலையும் தெரிவிக்கவில்லை. இது மீனவர்களின் உறவினர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மீனவர் உடல்கள்
குளச்சல், விழிஞம் கடற்பரப்பில் மீனவர்களின் உடல்கள் ஒதுங்கியதாகவும் அது கேரளா மீனவர்களின் உடல்கள் எனவும் கூறப்படுகிறது. இது போன்ற தகவல்கள் வரும் நிலையில் தமிழக அரசு தெளிவான விளக்கத்தை தெரிவிக்க வேண்டும்.

அரசுக்கு கடமை உண்டு
அப்படி தெரிவிக்காததால் மீனவர்கள் நிலைமை தொடர்பான விவரங்களை தமிழக அரசு இருட்டடிப்பு செய்ய முயற்சிக்கிறதோ? என்கிற சந்தேகத்தை உறவினர்கள் எழுப்புகின்றனர். இயற்கை சீற்றத்தில் சிக்கி உறவுகளை காணாமல் தவிப்போருக்கு தெளிவான தகவல் தந்து ஆறுதல் தர வேண்டியது தமிழக அரசின் கடமை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications