எப்.ஐ.ஆரை இணையதளத்தில் வெளியிடக் கோரும் வழக்கு... டி.ஜி.பி.க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை : தமிழகம் முழவதும் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கை எனப்படும் எஃப்.ஐ.ஆரை இணையதளத்தில் வெளியிட கோரிய வழக்கில் 2 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டி.ஜி.பி.க்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை செல்லூரை சேர்ந்த காசிராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில், நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

காசிராஜன் தாக்கல் செய்த மனுவில், கைது செய்யப்படும் நபர்களுக்கு கூட எப்.ஐ.ஆர். நகல் கொடுப்பது இல்லை என்றும், பதிவு செய்யப்பட்டு 24 மணி நேரத்துக்குள் எப்.ஐ.ஆர். நகலை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதி முறையாக கடைப்பிடிப்பது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதனால், குற்றம்சாட்டப்பட்டவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாகவும், எனவே, எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள் காவல்துறைக்கான இணையதளத்தில் வெளியிட உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரின் கோரிக்கையை தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் 2 மாதத்திற்குள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications