ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: ஜெ.வை எதிர்க்க தேமுதிக முடிவு?- விஜயகாந்த் ஆலோசனை
சென்னை: அனைத்து சாலைகளும் ஆர்.கே.நகரை நோக்கி என்பது போல ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பதவியிழந்த ஜெயலலிதா, குற்றமற்றவர் என்று நிரூபித்து மீண்டும் முதல்வராகி போட்டியிடுவதுதான்.
இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடவில்லை. பாஜக, காங்கிரஸ், தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களில் நிலைப்பாட்டினை அறிவிக்கவில்லை.
ஸ்ரீரங்கத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட டிராபிக் ராமசாமி, தன்னை பொது வேட்பாளராக ஆதரிக்க கோரி அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் விஜயகாந்துடன் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால் அதற்கான முடிவு என்னவென்று இன்னும் யாரும் அறிவிக்கவில்லை
இந்த நிலையில் ஆர்.கே. நகர் சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தேமுதிக மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஜெயலலிதா போட்டி
சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவை தொகுதிக்கு வரும் 27ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. அந்த தொகுதியில் அதிமுக வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடவுள்ளார்.

எதிர்கட்சிகளின் நிலை
தேர்தலை புறக்கணிப்பதாக திமுக, விசிக, பாமக, மதிமுக கட்சிகள் அறிவித்துள்ளன. பாஜக, காங் கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டொரு நாளில் முடிவினை அறிவிப்பதாக கூறியுள்ளன.

விஜயகாந்த் ஆலோசனை
இந்த சூழலில் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? இல்லை புறக்கணிப்பதா? என்பதை முடிவு செய்வதற்காக தேமுதிக மாவட்டச் செயலாளர்களுடன் விஜயகாந்த் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

கருத்துகேட்ட விஜயகாந்த்
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இடைத்தேர்தல் தொடர்பாக மாவட்ட செயலாளர்களின் கருத்துக்களை விஜயகாந்த் கேட்டறிந்தார்.

ரகசிய ஆலோசனை
ஆலோசனைக் கூட்டம் பற்றிய தகவலை மாவட்டச் செயலாளர்களுக்கு கடந்த சனிக்கிழமை அன்றுதான் விஜயகாந்த் தெரிவித்தாராம். இந்தக் கூட்டத்தை அவர் மிகவும் ரகசியமாக நடத்தி முடித்துள்ளார்.

உயர்மட்டகுழு ஆலோசனை
மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, நேற்று மாலை தேமுதிக உயர்மட்டக்குழு உறுப்பினர்களுடனும் விஜயகாந்த் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடுமா? என்பது பற்றி இன்று அல்லது நாளைக்குள் விஜயகாந்த் தனது அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது.

எதிரிகளே இல்லையே
எதிர்கட்சிகள் முற்றிலும் தேர்தலை புறக்கணித்தால் ஜெயலலிதா சொன்னதுபோல களத்தில் எதிரிகளே இல்லை என்பது உண்மையாகிவிடும் எனவே ஜெயலலிதாவை எதிர்த்து யாராவது களமிறங்குவார்களா? அல்லது பொது வேட்பாளராக டிராபிக் ராமசாமியை ஆதரிப்பார்களா? பார்க்கலாம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications