சென்னை ஏர்போர்ட்டில் மொபைல் உதிரி பாகங்கள் பார்சலில் 16 கிலோ தங்கம்...!
சென்னை: சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் இருந்த பார்சலில் 16 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 5.3 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சனியன்று விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் நூதன முறையில் விமான இருக்கைகளில் மறைத்து, தைத்து கொண்டுவரப்பட்ட 8கிலோ தங்கத்தைக் கைப்பற்றினார்கள்.
இந்நிலையில், செல்போன் உதிரிபாகங்கள் எனப் பெயர் எழுதப்பட்ட பார்சல் ஒன்று கடந்த நான்கைந்து தினங்களாக யாரும் உரிமைக் கோரி வராததால் கேட்பாரின்றி விமான நிலைய பார்சல் குடோனில் கிடந்துள்ளது. இதற்கிடையே அதிகளவிலான தங்கம் கடத்தப் பட இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
அதனடிபடையில், சந்தேகத்தின் பேரில் அப்பார்சலைப் பிரித்த போது, பார்சலின் மேல் அடுக்கில் மட்டும் மொபைல் போன்களும் அதனடியில் தங்கக் கட்டிகளும் அடுக்கி வைக்கப் பட்டிருந்ததை சுங்கத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
கைப்பற்றப்பட்ட மொத்தத் தங்கத்தின் மதிப்பு 16 கிலோ என்றும் அவற்றின் ரூபாய் மதிப்பு 5.3 கோடி ரூபாய் என மதிப்பிட்ட அதிகாரிகள் அதை அனுப்பியவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications