பணம் ஒதுக்கியும் கட்டப்படாத சித்த மருத்துவப் பிரிவு.. அலட்சியத்தில் அதிகாரிகள்.. நோயாளிகள் தவிப்பு
நிதி ஒதுக்கியும் சித்த மருத்துவப் பிரிவு கட்டடம் கட்டாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
நெல்லை: சித்த மருத்துவக் கல்லூரிக்கு நிதி ஒதுக்கியும் புதிய கட்டடம் கட்டப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் கொதிப்பில் உள்ளனர்.
நெல்லையில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரி 53 ஆண்டுகள் பழமையானது ஆகும். இங்கு சித்த மருத்துவ படிப்புக்கு 100 இடங்கள் உள்ளன. இங்கு முதுநிலை படிப்புகளும், நர்சிங் படிப்புகளும் உள்ளன. நெல்லையில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படுவதற்கு முன்பே தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரியில் உள்நோயாளிகள் பிரிவு, மருந்துகள் தயாரிக்கும் இடம் உள்பட சகல வசதிகளும் உள்ளன.

இங்கு நாள் தோறும் சுமார் 500 முதல் 1000 நோயாளிகள் வரை சிகிச்சைக்கு பெற்று வருகின்றனர். இந்தக் கல்லூரியில் குழந்தைகளுக்கென்று தனி பிரிவு கடந்த 1985ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தக் கட்டடம் கட்டி 30 வருடங்கள் ஆவதால் இந்த கட்டடத்தை இடித்து விட்டு கல்லூரி வளாகத்தில் ஆய்வு கூடம், மாணவர்களுக்கான தேர்வுக் கூடம் ஆகியவைகளுக்கான கட்டடங்கள் கட்ட கடந்த 2012ம் ஆண்டு சிறப்புக் குழு ஆய்வு நடத்தியது.
உடனடியாக 3 மாடிகள் கொண்ட கட்டடம் கட்ட ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டது. தனியாக செயல்பட்டு வந்த குழந்தைகள் வார்டு, அருகே வாகனங்கள் நிறுத்தப்படும் இரு அறைகள், மூலிகை கிடங்கு ஆகியவற்றை இடித்து அப்புறப்படுத்தி விட்டு அந்த இடத்தில் புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதற்காக குழந்தைகள் வார்டு கட்டிடம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இழுத்து மூடப்பட்டது. அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் பிரதான கட்டடத்திற்கு மாற்றப்பட்டனர். ஆனால் குறிப்பிட்டபடி பழைய கட்டடத்தை இடிக்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர். இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு இருப்பதாக கூறப்படுவதால் இடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications