கொடநாடு கொலையில் சந்தேகிக்கப்பட்ட மர வியாபாரி சஜீவனுக்கும் வருமான வரித்துறை கிடுக்குப்பிடி!
ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளையின் போது சந்தேகிக்கப்பட்ட மர வியாபாரி சஜீவனின் மர மில்கள் மற்றும் பர்னிச்சர் கடைகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை: சசிகலா குடும்பத்தினர் தவிர அவர்களுக்கு நெருக்கமாக இருப்பவர்களின் வீடு, அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கொடநாடு பங்களா கொலை மற்றும் கொள்ளையின் போது சந்தேகிக்கப்பட்ட மர வியாபாரி சஜிவனின் மர மில் மற்றும் பர்னிச்சர் கடைகளிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சசிகலா குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்களின் வீடுகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சல்லடை போட்டு சளிக்காத குறையாத ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர். கொடநாடு பங்களாவில் தனிச் செயலாளராக உள்ள நடராஜனிடம் தனி அறையில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். கொடநாடு பங்களாவில் உள்ள 30க்கும் மேற்பட்ட அறைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதே போன்று கொடநாடு பங்களா கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட மர வியாபாரி சஜீவனின் மர மில்கள் மற்றும் பர்னிச்சர் கடை உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. கொடநாடு பங்களாவில் இருக்கும் மரச்சாமான்கள் அனைத்தும் இவரின் வடிவமைப்பிலேயே உருவாக்கப்பட்டன.
கொடநாடு கொலையிலேயே இவர் மீது மிகுந்த சந்தேகப்பார்வை விழுந்தது ஆனால் அப்போதே சசிகலாவின் பெயரை சொல்லி தப்பித்தார் சஜீவன். இந்நிலையில் இன்று காலை முதல் அவரது வியாபார ஸ்தாபனங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கூடலூரில் இருக்கும் சஜீவன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications