போலி ஆவணம் மூலம் கோயில் நிலத்தை விற்க முயன்ற எஸ்.ஐ: நடவடிக்கைக்கு ஹைகோர்ட் உத்தரவு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்க முயன்ற எஸ்ஐ மீது நடவடிக்ரக எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி கோமஸ்புரத்தை சேர்ந்தவர் குமரேசன். தென்பாகம் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வருகிறார். கோமஸ்புரத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு சொந்தமான 94 சென்ட் நிலத்தை குமரேசன் போலி ஆவணம் தயாரித்து பிளாட்டுகளாக மாற்றி விற்க முயன்றுள்ளார். இதன் மதிப்பு ரூ.3 கோடி என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து அதே பகுதி சிலுவைப்பட்டியை சேர்ந்த கருவாட்டு வியாபாரி அருண் என்பவர் தூத்துக்குடி கலெக்டரிடம் புகார் தெரிவித்தார் ஆனால் அந்த புகார் மனு மீது எஸ்.ஐ எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து அவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் குமரேசன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தாளமுத்து நகர் போலீசாருக்கு உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து அடுத்தவர் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து விற்க முயன்றதாகவும் சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்காகவும் 3 பிரிவுகளின் கீழ் குமரேசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறப்பு எஸ்ஐ மீது நில மோசடி வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் தூத்துக்குடியில் காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிற காவல்துறையினர் பதட்டத்தில் உள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications