போலி ஆவணம் மூலம் கோயில் நிலத்தை விற்க முயன்ற எஸ்.ஐ: நடவடிக்கைக்கு ஹைகோர்ட் உத்தரவு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்க முயன்ற எஸ்ஐ மீது நடவடிக்ரக எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி கோமஸ்புரத்தை சேர்ந்தவர் குமரேசன். தென்பாகம் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வருகிறார். கோமஸ்புரத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு சொந்தமான 94 சென்ட் நிலத்தை குமரேசன் போலி ஆவணம் தயாரித்து பிளாட்டுகளாக மாற்றி விற்க முயன்றுள்ளார். இதன் மதிப்பு ரூ.3 கோடி என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து அதே பகுதி சிலுவைப்பட்டியை சேர்ந்த கருவாட்டு வியாபாரி அருண் என்பவர் தூத்துக்குடி கலெக்டரிடம் புகார் தெரிவித்தார் ஆனால் அந்த புகார் மனு மீது எஸ்.ஐ எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து அவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் குமரேசன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தாளமுத்து நகர் போலீசாருக்கு உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து அடுத்தவர் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து விற்க முயன்றதாகவும் சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்காகவும் 3 பிரிவுகளின் கீழ் குமரேசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறப்பு எஸ்ஐ மீது நில மோசடி வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் தூத்துக்குடியில் காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிற காவல்துறையினர் பதட்டத்தில் உள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications