ரூபாய் நோட்டு... ரயில் கூரையில் ஓட்டை.. ஞாபகம் இருக்கா?.. திருடர்களை கண்டுபிடிச்சுட்டாங்களாம்!
சேலம் ரயில் கொள்ளை குறித்து போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.
Recommended Video

சேலம்: பழைய ரூபாய் நோட்டு... ரயிலின் கூரையில் ஓட்டை.. கொள்ளை... இதெல்லாம் ஞாபகம் இருக்கா?
இந்த கேஸைதான் தூசி தட்டி திரும்பவும் எடுத்து அலசி ஆராய ஆரம்பித்து, துப்பு துலக்க போகிறார்கள் போலீசார்.
2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐஓபி வங்கிக்கு சொந்தமான பல கோடி ரூபாய் பழைய நோட்டுக்கள் 228 பெட்டிகளில் எடுத்து வரப்பட்டது. அப்போது ரயிலின் கூரையில் பெரிய சைஸ் ஓட்டையை போட்டு அதனுள் நுழைந்த ஆசாமிகள், அத்தனை பெட்டிகளையும் அலேக்காக தூக்கிக் கொண்டு சென்றனர். அந்த பணத்தின் மதிப்பு ரூ.5.75 கோடி என கூறப்பட்டது.

திணறிய போலீசார்
தொகையோ பெரியது... பெட்டிகளோ நிறைய... இடமோ பரபரப்பான 'எக்மார் ரயில்வே ஸ்டேஷன்'... இந்த கொள்ளை எப்படி, எப்போது, யாரால், எங்கே தொடங்கி நடைபெற்றது என்பதை யோசித்து முடிக்கவே போலீசார் ரொம்பவே திணறிவிட்டனர். சாதாரண கொள்ளை என நினைத்து முதலில் ரயில்வே போலீசார்தான் இதை விசாரிக்க வந்தனர். ஆனால் நடந்த சம்பவத்தை பார்த்தபோதுதான் விபரீதம் புரிந்தது.

2 வருடம் கழித்து விசாரணை
அடுத்து சிபிசிஐடி போலீசார் இதனை கையிலெடுத்தனர். ரயில்வே ஸ்டேஷனில் இருந்த காமிரா முதற்கொண்டு, வந்தவர், போனவர், பார்சல் ஊழியர்கள், பெட்டி தூக்கும் போர்ட்டர்கள் வரை விசாரித்துவிட்டார்கள். எதுவுமே பிடிபடவில்லை. ஆனால் 2 வருடம் கழித்து இப்போது இந்த கொள்ளையில் இறங்கியவர்கள் யார் என்பது இப்போது தெரிந்துவிட்டதாம்.

ம.பி. மற்றும் பீகார்
இதனை சிபிசிஐடி போலீசாரே தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேசம் மற்றும் பீகாரை சேர்ந்த 4 அல்லது 5 பேர் கொண்ட ஒரு கும்பல்தான் இதில் ஈடுபட்டிருக்கும் என்கின்றனர். சேலம்-விழுப்புரம் இடையே ரயில்வே மார்க்கத்தில் மர்மசெல்போன் எண்கள் இயங்கிவந்ததை கொண்டு இதனை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அந்த மர்ம போன்கள் எல்லாமே மத்திய பிரதேசத்திலிருந்து வந்திருக்கிறதாம். அதோடு இந்த பலே ஆட்கள் தங்கள் மாநிலத்திலேயே பல இடங்களில் கைவரிசையை காட்டியுள்ளனர் என்றும் போலீசார் கூறுகின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சகம்
ஆனால் இந்த ரயில் கொள்ளை விவகாரத்தில் சிபிசிஐடிக்கு பக்கபலமாக இருந்து உதவியது நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம்தான். எப்படி தெரியுமா? ஏற்கனவே இந்த விவகாரத்தில் கொள்ளையர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வந்த சிபிசிஐடி, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் உதவி கோரியது. அதை ஏற்றுதான் நாசா உதவி செய்ய முன்வந்தது.

தோள்கொடுத்த நாசா
அதன்படி சேலத்தில் இருந்து எழும்பூர் அந்த வந்த ரயிலின் 350 கி.மீ.தூரத்தை செயற்கை கோள் மூலம் புகைப்படங்களை அனுப்பி வைத்து சிபிசிஐடி-க்கு தோள் கொடுத்தது. அந்த படங்களின் அடிப்படையில்தான் 100-க்கும் மேற்பட்ட செல்போன் டவர்களின் அழைப்புகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் சிக்கிய க்ளூதான், சேலம்-விழுப்புரம் இடையே ரயில்வே மார்க்கத்திற்கு வந்த மர்மசெல்போன்கள். இவ்வளவையும் கண்டுபிடித்துவிட்ட சிபிசிஐடி போலீசார், விரைவில் அவர்களை கைது செய்தும் விடுவார்கள் என்பதில் சந்தேகமேயில்லைதான்!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications