சசிகலா குடும்பத்தினரின் ரூ.4500 கோடி சொத்துகளை கையகப்படுத்த ஐடி துறை திட்டம்
சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ. 4500 கோடி மதிப்பிலான சொத்துகளை கையகப்படுத்த வருமான வரித் துறை திட்டமிட்டுள்ளது.
சென்னை: சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ, 4500 கோடி மதிப்பிலான சொத்துகளை கையகப்படுத்த வருமான வரித் துறை திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த சொத்துகள் குறித்து 3 மாதத்துக்குள் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தினர்.
திருமண கோஷ்டி போல் ஒரே இடத்தில் கார்களை வாடகைக்கு எடுத்த அதிகாரிகள் 8 நாட்களாக சோதனை நடத்தினர்.

சசிகலா அறையில் சோதனை
மேற்கண்ட ரெய்டுகள் முடிவடைந்த ஒரு வாரத்துக்கு பின்னர் திடீரென இரவு போயஸ் கார்டனில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான 4 அறைகளிலும், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனுக்கு சொந்தமான ஒரு அறையிலும் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தினர். அப்போது அங்கிருந்து லேப்டாப், பென்டிரைவ் ஆகியன கைப்பற்றப்பட்டது.

செயலற்ற நிறுவனங்கள்
ஷெல் நிறுவனங்கள் எனப்படும் செயலற்ற நிறுவனங்களின் மீது சசிகலா குடும்பத்தினர் ரூ. 4500 கோடி சொத்துகளை குவித்திருப்பதாக வருமான வரித்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து சசிகலாவிடம் பிப்.10-ஆம் தேதி விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.

நேரில் சென்று விசாரணை
எனினும் தான் ஜெயலலிதாவுக்காக பிப்ரவரி 10-ஆம் தேதி வரை மௌன விரதம் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று கூறிவிட்டதால் வேறு ஒரு தேதியில் சிறைக்கே சென்று விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

3 மாதங்களுக்குள் விளக்கம்
சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ. 4500 கோடி மதிப்பிலான சொத்துகளை பினாமி சொத்துகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்த வருமான வரித் துறை திட்டமிட்டுள்ளது. அதுகுறித்து 3 மாதங்களுக்குள் சசிகலா மற்றும் குடும்பத்தினர் விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையில் சொத்துகள் நிரூபணமானால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வரை கிடைக்கக் கூடும் என கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications