சசிகலா தரப்பினர் போலி ஆவணங்கள் தாக்கல்... இரட்டை இலை எங்களுக்கே - கே.பி முனுசாமி
இரட்டை இலை வழக்கு விவகாரத்தில் சசிகலா தரப்பு கால தாமதம் செய்ய முயற்சி செய்வதாக கே.பி முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி: இரட்டை இலை விவகாரத்தில் சசிகலா தரப்பு கால தாமதம் செய்ய முயல்கிறது என கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார். டிடிவி தினகரனுக்கு வேறு வேலை இல்லை எனவும் கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் ஆணையம் முடக்கியது. ஆகஸ்டில் பிளவுபட்ட இபிஎஸ்-ஓபிஎஸ் அணியினர் ஒன்று சேர்ந்ததை தொடர்ந்து இரட்டை இலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

என்றாலும் டிடிவி தினகரன் துணை பொதுச்செயலாளர் என்ற பொறுப்பில் அதிமுக அம்மா அணியை நடத்தி வருகிறார். இவரது தரப்பில் இரட்டை இலை தங்களே வேண்டும் என்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
தேர்தல் ஆணையத்தில் இது குறித்து பலமுறை விசாரணை நடைபெற்று விட்டது. இறுதியாக கடந்த வாரம் முக்கிய விசாரணை நடைபெற்றது. இறுதி விசாரணை அக்டோபர் 30ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
நாளை வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால் இந்த விசாரணையில் பங்கேற்பதற்காக எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பில் கேபி முனுசாமி, மனோஜ்பாண்டியன், மைத்ரேயன் ஆகியோர் டெல்லி சென்றனர்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி முனுசாமி, தேர்தல் ஆணையத்தில் தவறான தகவல்கள் கொடுத்துள்ளதால் தோல்வி பயத்தில் வாய்தா வாங்க முயற்சி செய்கின்றனர். இரட்டை இலை எங்களுக்கே கிடைக்கும் என்றும் முனுசாமி கூறினார்
இரட்டை இலை வழக்கை சசிகலா தரப்பினர் காலதாமதம் செய்ய முயல்வதாக குற்றம் சாட்டினார். நாளை நடைபெற உள்ள வழக்கில் எங்களுக்கே இரட்டை இலை கிடைக்கும் என்றும் முனுசாமி தெரிவித்தார்.
தை பிறந்தால் தமிழர்களுக்கு வழி பிறக்கும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், இதற்கு கே.பி முனுசாமி, டிடிவி தினகரனுக்கு வேறு வேலையே இல்லை என்று கூறினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications