லோக்சபா தேர்தல்: தமிழகத்தில் 29ம் தேதி முதல் வேட்பு மனுத் தாக்கல்

16வது லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டன. வரும் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி மே மாதம் 14ம் தேதி வரை 9 கட்டங்களாக இத்தேர்தல் நடத்தப் பட உள்ளது. மே 16ம் தேதி ஒரே கட்டமாக வாக்குகள் எண்ணப் பட்டு முடிவுகள் அறிவிக்கப் பட உள்ளன.
தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 24-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையர் சம்பத் டெல்லியில் நேற்று வெளியிட்டார்.
இதில் தமிழகத்தில் 6வது கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும். அதாவது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 24-ந் தேதியன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் மே 16-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் தேதி அறிவிக்கப் படுவதற்கு முன்னதாகவே அதிமுக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டநிலையில், திமுக உட்பட மற்றபிறக் கட்சிகள் தொடர்ந்து கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் வரும் 29 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை தமிழக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், மனுக்கள் மீது பரிசீலனை செய்ய ஏப்ரல் 7ம் தேதி கடைசி என்றும், மனுக்களை வாபஸ் பெற கடைசித் தேதி ஏப்ரல் 9 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications