இந்து முன்னணியின் சர்ச் தாக்குதல், பஸ்கள் மீது கல்வீச்சுக்கு எஸ்.டி.பி.ஐ. கண்டனம்
சென்னை: திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணித் தலைவர் சுரேஷ் குமாரின் உடல் ஊர்வலத்தின்போது சர்ச் மீது தாக்குதல் நடத்தியது, பஸ்கள், கடைகள் மீது தாக்குதல் நடத்தியது, கிறிஸ்தவ போதகரின் காரைத் தாக்கிய செயலுக்கு எஸ்.டி.பி-.ஐ கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹலான் பாகவி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணித் தலைவர் சுரேஷ்குமார் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக நடைபெற்ற இந்த கொலை வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்த கொலை தொடர்பாக விசாரிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே காவல்துறை இந்த கொலைத் தொடர்பாக விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உண்மையான கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
அதே நேரத்தில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடித்துவிட்டு, குமாரின் உடலை ஊர்வலமாக எடுத்துச்சென்ற இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ், மற்றும் பாஜகவினர் மிக மோசமாக மத விரோதத்தை தூண்டும் விதத்தில் கோஷங்களை எழுப்பியும், திறந்த மற்றும் பூட்டியிருந்த கடைகள் மீது தாக்குதலை நடத்தியும் சென்றுள்ளனர். மேலும் பேருந்துகள், வாகனங்களை அடித்து நொறுக்கியவாறும் சென்றுள்ளனர்.
இதுமட்டுமின்றி சென்னை அமைந்தகரையில் உள்ள தேவாலயம் ஒன்றை தாக்கியதோடு, தேவாலயத்தின் போதகர், அவரது வாகனம் மற்றும் அங்குள்ள சகோதரிகளையும் வன்முறை கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. இந்த சம்பவத்தை கடுமையாக கண்டிக்கிறேன். காவல்துறை கடுமையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே இந்த வன்முறைக்கு காரணம்.
நேற்று முன்தினம் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுதலை செய்யக்கோரி அமைதியான முறையில் சாலை மறியல் செய்த பெண்கள் மீது, கொடூரமாக தடியடி நடத்தியும், இளைஞர்களை கைது செய்தும் மிக மோசமாக நடந்துகொண்ட காவல்துறை, சென்னையின் முக்கிய வீதிகளில் இப்படியொரு வன்முறையை எப்படி அனுமதித்தது என்று தெரியவில்லை.
காவல்துறை கடுமையாக செயல்பட்டு வன்முறையை தடுத்திருக்க வேண்டும். ஆகவே இனிமேலும் இதுபோன்ற வன்முறைகள் நிகழாமலிருக்க காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications