குற்றாலத்தில் களைகட்டிய சீசன்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
நெல்லை: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையத்தொடங்கியுள்ளது. நெல்லை,குமரி மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
குற்றாலத்தில் சாரல் மழையோடு சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குவியத்தொடங்கியுள்ளனர்.
மிதமான சாரலும் இதமான காற்றும் வீசுவதால் உற்சாகமடைந்துள்ள சுற்றுலா பயணிகள் குற்றால அருவிநீரில் குளித்து மகிழ்கின்றனர்.

தாமதமான குற்றால சீசன்
குற்றாலத்தில் வழக்கமாக ஆண்டுத்தோறும் ஜூன் மாத முதல் வாரத்தில் சீசனும் துவங்கிவிடும். ஆனால் இந்த ஆண்டு சீசன் முழுமையாக களைகட்டாமல் இருந்த நிலையில் . அருவிகளில் குறைந்த அளவே தண்ணீர் விழுந்தது.

களைகட்டிய சீசன்
இந்நிலையில் கடந்த இருநாட்களாக சீசன் களைகட்ட துவங்கியுள்ளது. சாரல் மழையோடு இதமான காற்றும் வீசுகிறது.
மேலும் மெயின்அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் பரவலாக தண்ணீர் விழுகிறது.

கொட்டும் அருவி நீர்
மெயின்அருவியில் ஆர்ச்சை தொட்டு தண்ணீர் கொட்டுகிறது. வெயிலும்,சாரலும், மாறி மாறி வந்து அருமையான குளுகுளு சீசன் களை கட்டியுள்ளது.

சுற்றுலா பயணிகள் வருகை
சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளதை அடுத்து அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஆர்பரித்து விழும் அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.

வியபாரிகள் மகிழ்ச்சி
குளுமையான சீசன் நிலவுவதால் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

குத்தாட்டம் போடும் குடிமகன்கள்
குற்றாலத்தில் வழக்கம் போல குடிமகன்கள் தொல்லையும்அதிகரித்தே காணப்படுகிறது.அருவிக்கரை முதல் பேருந்து நிலையம் மட்டுமின்றி ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி உற்சாகபானங்களை பருகி குத்தாட்டம் போடுவதும்,குப்புற கிடப்பதும் அதிகரித்துள்ளது.

விடுமுறை நாட்களில்
சனி, ஞாயிறு வாரவிடுமுறைத்தினம் என்பதால் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சாரல் மழை இடைவிடாமல் பெய்து வருவதால் பயணிகள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குமரியில் கனமழை
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், பூதப்பாண்டி, கொட்டாரம், மயிலாடி, கன்னிமார், திருவட்டார், புத்தன்அணை, இரணியல், ஆனைகிடங்கு உள்ளிட்ட பகுதிகளில் மழை விடிய விடிய பெய்துவருகிறது.

திற்பரப்பு அருவி
திற்பரப்பு அருவியிலும் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அருவியில் கொட்டும் நீரில் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications