குற்றாலத்தில் களைகட்டிய சீசன்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
நெல்லை: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையத்தொடங்கியுள்ளது. நெல்லை,குமரி மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
குற்றாலத்தில் சாரல் மழையோடு சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குவியத்தொடங்கியுள்ளனர்.
மிதமான சாரலும் இதமான காற்றும் வீசுவதால் உற்சாகமடைந்துள்ள சுற்றுலா பயணிகள் குற்றால அருவிநீரில் குளித்து மகிழ்கின்றனர்.

தாமதமான குற்றால சீசன்
குற்றாலத்தில் வழக்கமாக ஆண்டுத்தோறும் ஜூன் மாத முதல் வாரத்தில் சீசனும் துவங்கிவிடும். ஆனால் இந்த ஆண்டு சீசன் முழுமையாக களைகட்டாமல் இருந்த நிலையில் . அருவிகளில் குறைந்த அளவே தண்ணீர் விழுந்தது.

களைகட்டிய சீசன்
இந்நிலையில் கடந்த இருநாட்களாக சீசன் களைகட்ட துவங்கியுள்ளது. சாரல் மழையோடு இதமான காற்றும் வீசுகிறது.
மேலும் மெயின்அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் பரவலாக தண்ணீர் விழுகிறது.

கொட்டும் அருவி நீர்
மெயின்அருவியில் ஆர்ச்சை தொட்டு தண்ணீர் கொட்டுகிறது. வெயிலும்,சாரலும், மாறி மாறி வந்து அருமையான குளுகுளு சீசன் களை கட்டியுள்ளது.

சுற்றுலா பயணிகள் வருகை
சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளதை அடுத்து அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஆர்பரித்து விழும் அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.

வியபாரிகள் மகிழ்ச்சி
குளுமையான சீசன் நிலவுவதால் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

குத்தாட்டம் போடும் குடிமகன்கள்
குற்றாலத்தில் வழக்கம் போல குடிமகன்கள் தொல்லையும்அதிகரித்தே காணப்படுகிறது.அருவிக்கரை முதல் பேருந்து நிலையம் மட்டுமின்றி ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி உற்சாகபானங்களை பருகி குத்தாட்டம் போடுவதும்,குப்புற கிடப்பதும் அதிகரித்துள்ளது.

விடுமுறை நாட்களில்
சனி, ஞாயிறு வாரவிடுமுறைத்தினம் என்பதால் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சாரல் மழை இடைவிடாமல் பெய்து வருவதால் பயணிகள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குமரியில் கனமழை
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், பூதப்பாண்டி, கொட்டாரம், மயிலாடி, கன்னிமார், திருவட்டார், புத்தன்அணை, இரணியல், ஆனைகிடங்கு உள்ளிட்ட பகுதிகளில் மழை விடிய விடிய பெய்துவருகிறது.

திற்பரப்பு அருவி
திற்பரப்பு அருவியிலும் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அருவியில் கொட்டும் நீரில் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications