வாலிபால், பேஸ்கட் பால்.. ஏன் புட்பால் கூட தெரியும்.. அதென்ன "சீட் பால்"?
தமிழகத்தில் மழை வளத்தை அதிகரிக்க காடுகள் தோறும் "விதை பந்துகள்" வீசும் திட்டத்தை இளைஞர்கள் கையில் எடுத்துள்ளனர்.
சென்னை: மரம் நடுவதன் மூலம் மழை வளத்தை அதிகரிக்க முடியும் என்ற வகையில் விதை பந்துகளை வீசும் உன்னதமான பணியில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆங்காங்கே மரங்கள் வெட்டப்பட்டதால் மழை கிடைக்காமல் தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் மரக்கன்றுகளை நட்டு அதற்கு தண்ணீர் ஊற்றி உரமிட்டு பராமரிப்பது என்பது சாத்தியப்படாது. எனவே சாணம், மணல், விதை ஆகியவற்றை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து உருண்டைகளாக பிடித்து அதை காயவைத்து காட்டு பகுதிகளில் வீச வேண்டும்.

இளைஞர்கள் கையில்...
இதனால் விதையில் இருந்து முளை வந்து எந்த வித பராமரிப்பின்றி செடி வளரத் தொடங்கிவிடும் என்பதால் விதை பந்துகளை வீசும் திட்டத்தை இளைஞர்கள் கையில் எடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் 5000 விதைப்பந்துகள் விதைக்கப்பட்டுள்ளன.

விதை பந்துகள்
இதுகுறித்து தமிழக இளைஞர் அமைப்பு கூறுகையில், 5 பங்கு மணலுக்கு 3 பங்கு சாணம் கலந்து அதன் இடையே விதை வைத்து உருட்டி காயவைக்க வேண்டும். பின்னர் தமிழகத்தில் காடுகளை அதிகரிக்கும் நோக்கமாக தரிசு நிலங்கள் மற்றும் சாலை ஓரங்களில் விதைபந்துகளை இளைஞர்கள் அமைப்பினர் தூவி வருகின்றனர்.

1 கோடி இலக்கு
அதன்படி புங்கை, வேப்பை, புளிய மரம் உள்ளிட்ட மரங்களின் விதைகளை பந்து போல் உருட்டி வீசி வருகிறோம். இதுபோல் இந்த ஆண்டுக்குள் 1 கோடி விதை பந்துகளை வீச இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றனர்.
சீமை கருவேல மரங்கள்
மதுரையில் இயற்கை வளங்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் ஏரிகளில் ஆய்வு மேற்கொண்டு தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சீமைக்கருவேல மரங்களை அகற்றவும், 50 ஆயிரம் விதைப்பந்துகள் தூவி மரம் வளர்க்கவும் திட்டமிட்டுள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications