சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்றுவது சாத்தியமா? ஆச்சார்யா என்ன சொல்கிறார்
பெங்களூர் சிறையில் இருந்து சென்னை சிறைக்கு மாற்றுமாறு சசிகலாவின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றால் மட்டுமே சாத்தியமாகும் என்று மூத்த வக்கீல் கூறியுள்ளார்.
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே அது சாத்தியமாகும் என்று மூத்த வக்கீல் ஆர்.பி.ஆச்சார்யா கருத்து தெரிவித்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளராக உள்ள சசிகலாவால் பெங்களூர் சிறையில் இருந்தபடியே தமிழக அரசுக்கு ஆலோசனைகளை வழங்கமுடியாது என்பதால் தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்றுமாறு பெங்களூர் சிறை கண்காணிப்பாளரிடம் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதுகுறித்து மூத்த வக்கீலும், சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக தரப்புக்காக சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரானவருமான, ஆர்.பி.ஆச்சார்யா கருத்து தெரிவிக்கையில், ஒரு சிறையில் இருந்து மற்றொரு ஊரில் உள்ள சிறைக்கு மாற்றுவது குறித்து சம்பந்தப்பட்ட சிறை நிர்வாகம் முடிவு செய்யலாம்.
ஆனால் சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை பொறுத்தவரையில் தண்டனையை பெங்களூர் தனி நீதிமன்றம் பிறப்பித்திருந்தாலும் அதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. எனவே சசிகலாவை சென்னை புழல் சிறைக்கு மாற்றுவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. அவ்வாறு அவர் சென்னை சிறைக்கு மாற்ற அனுமதிக்கப்பட்டாலும் அதை எதிர்த்து வழக்குத் தொடர முடியும் என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே உச்ச நீதிமன்றம் உறுதி செய்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய சசிகலா தரப்பு ஆலோசனை நடத்தி வருகிறது.
ஒரு வழக்கில் சிறைக்குச் சென்ற 30 நாள்களுக்குள் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications