ஒரு வாரமாக நடைபெற்ற பட்டாசு தொழிற்சாலைகள் வேலைநிறுத்தம் வாபஸ்! காரணம் இதுதான்
சிவகாசியில் ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்யக் கோரி நடந்து வந்த பட்டாசு ஆலை போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
சிவகாசி: எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் வரி குறைப்பு பரிசீலிக்கப்படும் என்ற உறுதியைத் தொடர்ந்து பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள ஜிஎஸ்டி வரியால் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பட்டாசுப் பொருட்களுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. இதனை குறைக்குமாறு பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் மாற்றம் செய்யப்படாமலேயே ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டது. அதனை கண்டிக்கும் விதமாக ஜுன் 30ம் தேதி முதல் பட்டாசு ஆலைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.

முடங்கிய உற்பத்தி
பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக விற்பனையாளர்களும் போராட்டத்தில் குதித்தனர். வேலைநிறுத்தம் காரணமாக சிவகாசி உள்பட விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 700க்கும் பட்டாசு ஆலைகளும், 600க்கும் மேற்பட்ட விற்பனைக் கடைகளும் மூடப்பட்டன.

வேலைஇழப்பு
கடந்த 5 நாட்களாக பட்டாசு உற்பத்தித் தொழில் முற்றிலும் முடங்கிப் போனது. ஆறாவது நாளாக இன்றும் வேலைநிறுத்தம் நீடித்ததால் 5 லட்சம் பேர் வேலை இழந்தனர்.

உறுதி
இதனிடையே வரி குறைப்பு குறித்து பரிசீலிக்கப்படும் என்று மத்திய வணிக வரித்துறை செயலர் உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக, உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆசைத்தம்பி தெரிவித்துள்ளார்.

வாபஸ்
வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஆசைத்தம்பி கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications