சிவகங்கை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் எரித்துக் கொலை... 6 பேர் கைது
மானாமதுரை: திருப்புவனம் அருகே சொத்து தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே கிளாதரி பொய்கை வயலில் தோட்டத்து வீட்டில் வசித்த சங்கி,70, இவரது ஒரே மகள் முத்தம்மாள்,50, பேரன்கள் பொன்னுசாமி,மெக்கானிக் ராஜா,20 ஆகியோர் ஜூலை 15ம் தேதி எரித்துக் கொலை செய்யப்பட்டனர். இந்த குடும்பத்தில் முத்தம்மாளின் இரு மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசித்ததாலும், இளைய மகன் சரவணக்குமார் ராணுவத்தில் பணிபுரிவதாலும் தப்பினர்.

இந்த கொலை வழக்கு குறித்து எஸ்.பி., துரை உத்தரவில் டி.எஸ்.பி.,க்கள் ராமசாமி, புருஷோத்தமன், இன்ஸ்பெக்டர்கள் சாந்தி, பரக்கத்துல்லா, ரமணி அடங்கிய தனிப்படையினர் விசாரணை செய்து வருகின்றனர். முத்தம்மாள் குடும்பத்தினர் விவசாயத்திற்காக பொய்கைவயலுக்கு வந்துள்ளனர். விவசாயம், ஆடு, மாடுகள் வளர்த்துக்கொண்டு அங்கேயே தங்கியுள்ளனர். இவரது இடத்தை சுற்றிலும் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர், பல ஏக்கர் வாங்கி குவித்துள்ளார். முத்தம்மாளின் இடத்தை வாங்க முயற்சி நடந்தது. முத்தம்மாள் அசைந்து கொடுக்கவில்லை. இடத்தை காலி செய்ய மறுத்துள்ளார்.
இது தொடர்பாக ரியல் எஸ்டேட் அதிபருக்கும் முத்தம்மாளுக்கும் பிரச்னை எழுந்துள்ளது. முத்தம்மாளின் நெருங்கிய உறவினர் ஒருவர் மேலூர் மில்கேட் பகுதியில் வசிக்கிறார். இவருக்கும், முத்தம்மாளுக்கும் இட பிரச்னை இருந்துள்ளது. இது பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் உயிரிழந்த முத்தம்மாள் குடும்பத்தினரின் உறவினர்களுக்கு இந்த கொலை வழக்கில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சிவகங்கை மாவட்ட போலீசார் திங்கட்கிழமையன்று 6 பேரை கைது செய்தனர். நிலத்தகராறு காரணமாகவே 4 பேரை எரித்து கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications