சென்னையில் எப்போதும் இல்லாத அளவுக்கு புகை மூட்டம்.. வீடுகளுக்குள்ளும் சூழ்ந்ததால் மக்கள் அவதி
சென்னையில் எப்போதும் இல்லாத அளவுக்கு புகை மூட்டம் சூழ்ந்ததால் மக்கள் பெரும் அவதி அடைந்தனர்.
சென்னை: தீபாவளி பண்டிகையின் போது வெடிக்கப்பட்ட வெடிகளால் சென்னையில் எப்போதும் இல்லாத அளவுக்கு புகை மூட்டம் சூழ்ந்ததால் மக்கள் பெரும் அவதியடைந்தனர்.
நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று வட இந்தியர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.
இதனால் கடந்த 2 நாட்களாக சென்னை மாநகர் முழுவதும் கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளது. தீபாவளி பட்டாசு புகையால் சென்னை மாநகர் முழுவதும் கடந்த 2 நாட்களாக காற்று மாசு பலமடங்கு அதிகரித்து புகை மண்டலமாக காட்சி அளித்தது.

வீட்டிற்குள்ளும் சூழ்ந்த புகை
இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுவாசிக்க முடியாமல் திணறினர். வீடுகளுக்குள்ளும் புகை மண்டலம் சூழ்ந்ததால் மக்கள் வீட்டிற்குள்ளும் இருக்க முடியாத நிலை ஏற்பட்டது.

புகை மூட்டத்தால் அவதி
சுற்றுச்சூழலும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. புகை மூட்டத்தால் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். ரயில்களின் வேகமும் குறைக்கப்பட்டு இயக்கப்பட்டது.

சவுகார்பேட்டையில்தான் அதிகம்
இதுதொடர்பாக தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கையில் எதிர்பார்த்ததைவிட 8 மடங்கு அதிக காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக அளவாக சவுகார்பேட்டையில் மிதக்கும் துகள்களின் அளவு 777 மைக்ரோ கிராமாக இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 மடங்கு அதிகரிப்பு
இதேபோல் திருவல்லிக்கேணி, பெசன்ட்நகர், நுங்கம்பாக்கம், சவுகார்பேட்டை, தி.நகர் என அனைத்து இடங்களிலும் காற்றில் மிதக்கும் துகள்கள் அளவு நிர்ணயிக்கப்பட்ட 100 மைக்ரோ கிராமை விட பல மடங்கு அதிகமாக இருந்தது.
குறைந்த அளவாக பெசன்ட்நகரில் 387 மைக்ரோ கிராம இருந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு கூட சவுகார்பேட்டையில் 178 மைக்ரோ கிராமும், பெசன்ட்நகரில் 102மைக்ரோ கிராம் தான் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 10 மடங்கு அதிகரித்துள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications