சென்னையில் உள்ள ஜெ.தீபா அலுவலகத்தின் மீது மர்மநபர்கள் கல்வீச்சு: போலீஸார் விசாரணை
சென்னையில் உள்ள ஜெ.தீபாவின் கட்சி தலைமையகத்தின் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
Recommended Video

சென்னை : சென்னை தி.நகர் பகுதியில் இயங்கி வந்த ஜெ.தீபாவின் கட்சி தலைமையக அலுவலகத்தில் நேற்று கல்வீச்சு தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. ஜெயலலிதா போல உருவ ஒற்றுமை கொண்டிருந்த இவரை, அதிமுகவில் ஏற்பட்ட பிரச்னைகளை அடுத்து தொண்டர்கள் இவர் பின்னால் அணி திரண்டனர்.

இதையடுத்து தீவிர அரசியலில் குதித்தார் ஜெ.தீபா. அதிமுகவில் இடம் இல்லாத நிலையில், எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்கிற பெயரில் தனிக்கட்சி ஒன்றை தொடங்கினார். ஆனால், தொடர்ந்து உற்சாகமற்ற செயல்பாடுகளினால் இவர் பின்னால் இருந்த அணி கரைந்தது. இருப்பினும் இன்னும் சிலர் இவருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில் கூட ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கலில், சரியாக நிரப்பப்படாமல் இருந்த இவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இவரது கட்சி தலைமையகம் சென்னை தி.நகரில் உள்ள சிவஞானம் தெருவில் இவரது வீட்டின் அருகே இயங்கி வந்தது.
இந்நிலையில், நேற்று இரவு சுமார் 12.30 மணியளவில் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தலைமையகத்தின் மீது மர்மநபர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். இதில் அலுவலகத்தின் கதவு, ஜன்னல் கண்ணாடி ஆகியவை சேதமடைந்து உள்ளன.
இது தொடர்பாக மாம்பலம் காவல்நிலையத்தில் தீபா புகார் அளித்து உள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications