மீண்டும் வருகிறது மழை... நாளை முதல் 2 நாட்களுக்கு.. தென் தமிழகத்தில் பெய்யலாமாம்!
சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து வருவதால், தமிழகத்தின் தென் பகுதிகளில் நாளை முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக ஸ்கைமெட் வானிலை இணையதளத் தகவல் தெரிவிக்கிறது.
கடந்த பெருமழை வெள்ளத்திற்குப் பிறகு தமிழகம் கிட்டத்தட்ட வறண்ட நிலையில்தான் உள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட தமிழகப் பகுதிகளில் மழை இல்லை. தொடர்ந்து வெயிலும், இரவில் பனியுமாக உள்ளது.
இந்த நிலையில் புதிய மழைக்கு தற்போது வாய்ப்பு வந்துள்ளது. இருப்பினும் இந்த மழை வட தமிழகத்தை விட தென் தமிழகத்திற்கே கிடைக்கும் என்றும் ஸ்கைமெட் தெரிவிக்கிறது.

வங்கக் கடலில் காற்றழுத்தம்
வங்கக் கடலின் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதாம். இது மேற்கு நோக்கி நகரந்து வருகிறது. அதாவது தெற்கு இலங்கையை நோக்கி நகர்ந்து வருகிறது.

தென் தமிழகத்திற்கு மழை
இதன் காரணமாக தமிழகத்தின் தென் பகுதியில் நாளை முதல் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென் பகுதிகளில் பரவலாக லேசான மழை இருக்கலாமாம்.

2 நாட்களுக்கு
இந்த மழையானது 2 நாட்களுக்கு இருக்கலாம். குறிப்பாக நெல்லை, பாம்பன், தூத்துக்குடி பகுதிகளில் நாளை மழை பெய்ய வாய்ப்புள்ளதாம்.

மதுரை
மதுரை, விருதுநகர், சிவகங்கை, நாகை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கன மழைக்கு வாய்ப்பில்லை
இந்த மழையானது அதிகபட்சம் மிதமானதாக மட்டுமே இருக்கும் என்றும் கன மழைக்கு வாய்ப்பில்லை என்றும் ஸ்கைமெட் தெரிவித்துள்ளது.

சென்னையில் வெயில்தான்
அதேசமயம், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் லேசான காற்று வீசும் என்றும் மழைக்கு வாய்ப்பில்லை என்றும், வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications