தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா? - சென்னையில் ஸ்பெஷல் பஸ் டிக்கெட் ரிசர்வேசன் ஆரம்பம்
சென்னை கோயம்பேட்டில் தீபாவளி சிறப்பு பேருந்து முன்பதிவு கவுன்டர்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
சென்னை : தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக இயக்கப்பட உள்ள சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் புக்கிங் கவுன்டர் சென்னையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு கவுன்டர்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோயம்பேட்டில் இன்று திறந்து வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது : தீபாவளிக்காக வெளியூர் செல்ல 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். சிறப்பு பேருந்துகள் டிக்கெட் முன்பதிவிற்காக இன்று முதல் சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

29 கவுனட்ர்கள் திறப்பு
கோயம்பேட்டில் 26 டிக்கெட் கவுன்டர்கள் திறக்கப்பட்டு முன்பதிவு நடைபெற்று வருகிறது. மெப்ஸ் பேருந்து நிலையத்தில் 2 கவுன்டர்கள்,பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் 1 கவுன்டர் திறக்கப்பட்டு டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது. அக்டோபர் 15,16,17 நாட்களில் கனரக வாகனங்கள் சென்னைக்குள் வர தடை செய்யப்பட்டுள்ளது. மதியம் 2 மணி முதல் அதிகாலை 2 மணி வரை கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

சுங்கச்சாவடியில் சிறப்பு ஏற்பாடு
சுங்கச்சாவடிகளில் பேருந்துகளுக்கு தனி வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது, எனவே போக்குவரத்து சிரமமின்றி மக்கள் பாதுகாப்பாக தங்களது ஊர்களுக்கு செல்லலாம். இது மட்டுமின்றி சேலம், திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட ஊர்களிலும் போக்குவரத்து சீராக இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

கடுமையான நடவடிக்கை
தனியார் பேருந்து கட்டணத்தை பொறுத்தவரை பெரிய நிறுவனங்களின் கட்டணம் சரியான அளவில் உள்ளது. இதுவரை இணையத்தில் எடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 11 ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தகவல் வந்துள்ளது, அவர்கள் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யார் அதிக கட்டணம் வசூலித்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊர் திரும்பவும் சிறப்பு பஸ்
மழைகாலங்களில் ஒழுகக்கூடிய பேருந்துகளை கணக்கெடுத்து அவற்றை சரிசெய்திருக்கிறோம். பிற ஊர்களில் இருந்து சென்னை திரும்ப 3 ஆயிரத்து 700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதே போன்று மற்ற ஊர்களிலும் சிறப்பு பேருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications