எல்லோருக்கும் நன்றி.. தலைவர் மீண்டும் வருவார்.. ஸ்டாலின் நெகிழ்ச்சி டிவிட்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரித்த எல்லோருக்கும் நன்றி, கருணாநிதி மீண்டும் குணமாகி வருவார் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார்.
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரித்த எல்லோருக்கும் நன்றி, கருணாநிதி மீண்டும் குணமாகி வருவார் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு தற்போது உடல்நிலையில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. அவருக்கு சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இதனால் 6 மருத்துவர் கொண்ட குழு மூலம் அவர் இப்போது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார்.
சில நாட்களுக்கு முன் அவருக்கு நடந்த ஆப்ரேஷனில் இருந்தே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறது. காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல் இப்போது கொஞ்சம் தேறி வருவதாகவும் அவர் நல்ல உடல்நலனுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரித்த எல்லோருக்கும் நன்றி, கருணாநிதி மீண்டும் குணமாகி வருவார் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார்.
On behalf of the DMK, I thank @rashtrapatibhvn & @PMOIndia for their enquiries about @kalaignar89's health. I am extremely grateful for their offers of help. Thalaivar is getting the best medical care and treatment. We hope he will recover soon and thank everyone in his own words
— M.K.Stalin (@mkstalin) July 27, 2018
அதில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்ததற்காக குடியரசுத்தலைவருக்கும், பிரதமருக்கும் திமுகவின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் உதவிக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். தலைவருக்கு சிறப்பான மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் குணமடைந்து, நேரடியாக நன்றி செலுத்துவார்.
I am thankful to @RahulGandhi, @SitaramYechury & D Raja for calling to enquire about Thalaivar Kalaignar's health. The concern and wishes from everyone will surely aid @kalaignar89's recovery and we hope he will be able to meet everyone soon.
— M.K.Stalin (@mkstalin) July 27, 2018
தலைவரின் உடல்நிலை குறித்து விசாரித்த ராகுல்காந்தி, சீதாராம் யெச்சூரி, டி ராஜா ஆகியோருக்கும் நன்றி. அவர்களின் அக்கறையே கருணாநிதியை குணப்படுத்தி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வைக்கும். அவர் விரைவில் எல்லோரையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கலாம்.