வெளிமாநிலத்தில் வாழும் தமிழக மாணவர்களுக்கு பாதுகாப்பு.. ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்
வெளிமாநிலங்களில் உள்ள தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: வெளிமாநிலங்களில் உள்ள தமிழக மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என சட்டசபையில் ஸ்டாலின் கவனஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.
அஹமதாபாத் மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் தமிழக மாணவர் மாரிராஜ் தற்கொலைக்கு முயன்றதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. மருத்துவராகும் கனவோடு எம்.பி.பி.எஸ். முடித்த மாரிராஜ் அஹமதாபாத்தில் உள்ள பி.ஜே மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை தொடர்பான மேற்படிப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் தன்னை அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கவில்லை என்றும், சாதி பெயரில் தரக்குறைவாக நடத்துவதாகவும் கூறி தூக்க மாத்திரை போட்டு மாரிராஜ் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த விவகாரம் குறித்து சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், வெளிமாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இதுதொடர்பாக பேசிய அவர், வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் வருபவர்கள் பாதுகாப்பாக படிக்கும் நிலை இங்கு உள்ளது. தமிழகத்தில் இருந்து வெளிமாநிலம் சென்று படிக்கும் மாணவர்கள் தாக்கப்படுவதும், தற்கொலைக்கு தூண்டப்படுவதும் வேதனை அளிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
வெளிமாநிலம் சென்று படிக்கும் மாணவர்கள் தாக்கப்படுவதை அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்காக சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், மாரிராஜ் தற்போது பாதுகாப்புடன் உள்ளதாகவும், வெளி மாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு உதவிகள் செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications