நாகை, பாம்பன் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
நாகப்பட்டினம்: சென்னை, நாகை, கடலூர், தூத்துக்குடி, பாம்பன், ராமேஸ்வரம், மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்து வந்தது. சென்னையிலும் இன்று பரவலாக மழை பெய்தது. மேல் அடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மைய அதிகாரிகள் கூறியிருந்தனர்.
இந்நிலையில் வடக்கு அந்தமானில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலாக உருவெடுக்கலாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து சென்னை, நாகை, கடலூர், தூத்துக்குடி, பாம்பன், ராமேஸ்வரம், மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்றும், வெப்பசலனம் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் இதனால் ஒடிஷாவிற்கு பாதிப்பு இருக்கும் எனவும் கணித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், திருச்செங்கோட்டில் 10 சென்டி மீட்டரும், தர்மபுரி, பாப்பிரெட்டிபட்டி பகுதிகளில் 9 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன் கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது.
விருதுநகரில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கனமழை பெய்தது. அருப்புக்கோட்டையில் பெய்த மழையால் விருதுநகர் சாலை மற்றும் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications