ஓகி புயலால் கைவிடப்பட்ட மீனவ கப்பல்... அதிரடியாக மீட்ட கடற்படை.. வீடியோ
ஓகி புயல் காரணமாக கைவிடப்பட்ட மீனவ படகு ஒன்று இந்திய கடற்படையால் மீட்கப்பட்டு இருக்கிறது.
சென்னை: ஓகி புயல் காரணமாக கைவிடப்பட்ட மீனவ படகு ஒன்று இந்திய கடற்படையால் மீட்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து இந்திய கடற்படை வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
ஓகி புயல் காரணமாக மீனவர்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் காணாமல் போவதும், சிறிய தீவுகளில் தஞ்சம் அடைந்து இருப்பதும் நடந்து இருக்கிறது.
தற்போது இவர்களையும், இவர்களது கப்பல்களையும் மீட்கும் பணியில் கடற்படை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இந்திய கடற்படை தனியாக கடலில் கைவிடப்பட்டு இருந்த கப்பல் ஒன்றை மீட்டு இருக்கிறது.
கயிறுகள் மற்றும் கொக்கிகளின் உதவியுடன் கடற்படை இந்த மீட்பு பணியை செய்தது. இந்த செயலில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் ஷாரதா ஈடுபடுத்தப்பட்டது.
தற்போது இந்த மீட்பு பணியை இந்திய கடற்படை வீடியோவாக டிவிட்டரில் வெளியிட்டு இருக்கிறது.
#HADR #CycloneOchki #SAR operation :- A stranded fishing vessel taken under tow and rescued by INS Sharda @DefenceMinIndia @SpokespersonMoD @nsitharaman pic.twitter.com/90VS03fBJb
— SpokespersonNavy (@indiannavy) December 3, 2017