போராட்டம் மட்டும் அல்ல நாங்கள் இதையும் செய்வோம்.. கச்சா எண்ணெய்யை அகற்றும் கல்லூரி மாணவர்கள்
எண்ணூரில் கச்சா எண்ணெய்யை அகற்றும் பணியில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: எண்ணூர் துறைமுகப் பகுதியில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்கள் கச்சா எண்ணெய்யை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
எண்ணூர் துறைமுகப் பகுதியில் கடந்த 28ஆம் அதிகாலை காலியாகச் சென்ற கப்பலும் கச்சா எண்ணெய் ஏற்றிவந்த மற்றொரு கப்பலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் எண்ணெய் கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் முழுவதும் வெளியேறி கடலில் பரவியது.
இதனால் எண்ணூர் முதல் திருவான்மியூர் வரை கச்சா எண்ணெய் படலம் படர்ந்துள்ளது. கடற்பரப்பில் ஒரு அடி உயரத்துக்கு அடர்த்தியாக பரவியுள்ள கச்சா எண்ணெய்யை அகற்றும் பணி இன்று 8வது நாளாக நீடிக்கிறது.

கச்சா எண்ணெய்யை அகற்றும் பணி நீடிப்பு
கச்சா எண்ணெய்யை அகற்ற எந்திரங்கள் கைகொடுக்காததால் மாநகராட்சி ஊழியர்கள், துப்புரவு பணியார்கள், தன்னார்வளர்கள் மற்றும் மீனவர்கள் கச்சா எண்ணெய்யை அகற்றி வருகின்றனர். அவர்கள் வாளியைக் கொண்டு அகற்றி வருகின்றனர்.

எண்ணூரில் குவியும் மாணவர்கள்
முன்னதாக எண்ணெய் கசிவை அகற்ற தன்னார்வலர்கள் தேவை என சமூக வலைதளங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதற்காக 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் தாங்களாகவே எண்ணூர் கடற்கரைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

தாங்களக முன்வந்த மாணவர்கள்
இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவாக எண்ணூர் கடற்பகுதியில் கல்லூரி மாணவர்களும் கச்சா எண்ணெய்யை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரி மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து கச்சா எண்ணெய்யை அகற்றுவதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

புரட்சி செய்த மாணவர்கள்
அண்மையில் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அறவழிப் போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக குடியரசுத தலைவர் ஒப்புதலுடன் ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications