சின்ன பிரச்சினையில்லை, சின்னமே பிரச்சினை.. அதிமுக-தமாகா கூட்டணி அமைவதில் சிக்கல்
சென்னை: 15 சீட் வரை தமிழ் மாநில காங்கிரசுக்கு ஒதுக்கித்தர அதிமுக முன்வந்தபோதிலும், இரட்டை இலை சின்னத்தில் த.மா.கா போட்டியிட வேண்டும் என்று அதிமுக தலைமை நிபந்தனை விதித்துள்ளதால், கூட்டணி அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மக்கள் நல கூட்டணி பக்கமாக வாசன் நகர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டசபை தேர்தலில் அதிமுக 227 தொகுதிகளில் போட்டியிடவும், எஞ்சிய 7 தொகுதிகளில் தோழமை கட்சியினரை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட செய்யவும் தீர்மானித்து சில தினங்கள் முன்பு ஜெயலலிதா பட்டியலை வெளியிட்டார்.
தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய இரு கட்சிகளும், அதிமுக கூட்டணியில் இணைய விரும்பிவந்த நிலையில் இரு கட்சிகளுக்கும் சீட் தரப்படவில்லை.

சந்திப்பதாக தகவல்
இன்று அமாவாசை தினம் என்பதால், வாசனோடு கூட்டணி பற்றி ஜெயலலிதா பேசுவார். இருவருக்கும் நடுவே தொகுதி உடன்பாடு கையெழுத்தாகும் என்று தகவல் வெளியாகியிருந்தது. நேற்று இரவு 2 மணிவரை அதிமுக சார்பில் சில அமைச்சர்களும், த.மா.கா சார்பில் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் போன்ற தலைவர்களும் கூட்டணி பற்றி பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியது.

கண்டிஷன்
இந்நிலையில், இன்று வாசனை ஜெயலலிதா சந்திக்கவில்லை. இதற்கு காரணம், சின்னம் பிரச்சினை என்று கூறப்படுகிறது. 15 தொகுதிகள் வரை த.மா.காவுக்கு ஒதுக்க, அதிமுக முன்வந்ததாகவும், ஆனால், அத்தனை தொகுதிகளிலும், அதிமுக சின்னமான இரட்டை இலையில்தான் வாசன் கட்சியினர் போட்டியிட வேண்டும் என்றும் கண்டிஷன் போடப்பட்டதாம்.

சந்திப்பு ரத்து
காங்கிரசுக்கு மாற்றாக, த.மா.காவை கொண்டுவர முயன்று வரும் வாசன், தேர்தல் ஆணையத்திடமிருந்து, தங்கள் கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னத்தை பெற்றுள்ளார். இந்நிலையில், அதிமுகவின் சின்னத்தில், த.மா.கா போட்டியிட்டால் அது அக்கட்சிக்கு பின்னடைவு என்று வாசன் கருதுகிறார். இதனால் தொகுதி உடன்பாடு செய்வதற்காக ஜெயலலிதாவை இன்று வாசன் சந்திக்கவில்லை.

கடைசியில் கை விரிப்பு
மேலும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஜெயலலிதா நிர்பந்திக்கிறார் என்ற தகவலை தன்னிடம் போனில் சொன்ன அமைச்சரிடம் பாய்ந்துவிட்டாராம் வாசன். என்னை நம்பி திரண்டு வந்துள்ள லட்சக்கணக்கான தொண்டர்களிடம் நான் தலைகாட்ட முடியாது. எங்களுக்கென்று தனியான அடையாளம் வேண்டும். இவ்வளவு காலம் கழித்து கடைசி நேரத்தில் இப்படிச் சொல்வது சரியல்ல என்று வாசன் கோபம் காட்டியதாக கூறப்படுகிறது.

சாதனை முயற்சி
அதிமுக இதுவரை 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது கிடையாது. காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சி இதுபோல போட்டியிட்டது. பின்னர் எந்த ஒரு கட்சி தலைமைக்கும் அந்த தைரியம் வரவில்லை. இந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் இரட்டை இலையையே களமிறக்க ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதுதான், இந்த பிரச்சினைக்கு காரணம் என்று கிசுகிசுக்கிறது கார்டன் வட்டாரம்.

மக்கள் நல கூட்டணி
அதிமுக கண்டிஷனுக்கு வாசன் சம்மதிக்க மாட்டார் என்றே தெரிகிறது. எனவே அக்கட்சியின் அடுத்த தேர்வு, மக்கள் நல கூட்டணியாகத்தான் இருக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தோர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதால், த.மா.கா இணையாது என்பது அக்கட்சியினர் எண்ணமாகவும் உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications