ஈரானில் பரிதவிக்கும் தமிழக மீனவர்கள் : கொடுமைப்படுத்துவதாக வாட்ஸ் அப்பில் தகவல்
தமிழக மீனவர்கள் 15 பேரை ஈரான் நாட்டு கடற்படை கைது செய்து கொடுமைப்படுத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை : ஈரான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் தாங்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக வாட்ஸ் அப் வீடியோ மூலம் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 15 மீனவர்கள் இரண்டு விசைப்படகுகளில் கடந்த மாதம் 22ம் தேதி துபாய் நாட்டு கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஈரான் நாட்டு கடற்படை அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது.

தங்களுக்கு உணவு, தண்ணீர் கூட கொடுக்காமல் தங்களை கொடுமைப்படுத்துவதாக மீனவர்கள் தங்கள் உறவினர்களுக்கு வாட்ஸ் - அப் வீடியோ மூலம் தகவல் தெரிவித்து உள்ளனர். இதனால் , மீனவர்களின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்டு அவர்கள் தாயகம் திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications