ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இது மாதிரி இருந்திருக்குமா.. பொன் ராதா ஆதங்கம்
தமிழக அரசு சரியாக செயல்படவில்லை என்று மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
நாகப்பட்டினம்: தமிழக அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. ஜெயலலிதா உயிருடன் இருந்து இருந்தால் உரிய நடவடிக்கைகளை உடன்குடன் எடுத்து இருப்பார் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நாகப்பட்டிணத்தில் அனைவரும் இணைந்து அனைவருக்கும் வளர்ச்சி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பிரதமர் மோடி அனைத்து தரப்பு மக்களும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த பிறகு இதுவரை 20 கோடிக்கும் அதிகமான பேர் வங்கி கணக்கு தொடங்கி உள்ளனர்.

இந்த வங்கி கணக்குகளில் ரூ 65 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டு உள்ளது. பிரதமர் விபத்து காப்பீடு திட்டத்தில் இந்தியாவில் 5 கோடிக்கும் அதிகமான பேர் சேர்ந்துள்ளனர்.
தமிழகத்தில் 15.87 லட்சம் பேரும், நாகை மாவட்டத்ல் 1.73 லட்சம் பேரும் சேர்ந்துள்ளனர். ஆயுள் காப்பீடு திட்டத்தில் 3 கோடி பேர். தமிழகத்தில் 22.45 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர்.
விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடப்பாண்டு மத்திய அரசு ரூ. 10 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
தமிழக அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. ஜெயலலிதா உயிருடன் இருந்து இருந்தால் உரிய நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுத்து இருப்பார். இப்போதய தமிழக முதல்வர் சரியாக செயல்படவில்லை.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதும், வராததும் அவரது விருப்பம். அவர் பாஜகவிற்கு வந்தால் வரவேற்போம் என்று கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications